வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

சென்னை அருகே புதிய சுயநிதி மருத்துவக் கல்லூரி

சென்னை, ஜூலை 1: சென்னை போரூர் அருகே நடப்புக் கல்வி ஆண்டில் (2011-12) புதிதாக 150 எம்.பி.பி.எஸ். இடங்களுடன் "மாதா மருத்துவக் கல்லூரி' தொடங்க இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில்

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 9:27 pm

ஜே.ரங்கராஜன்

சென்னை, ஜூலை 1: சென்னை போரூர் அருகே நடப்புக் கல்வி ஆண்டில் (2011-12) புதிதாக 150 எம்.பி.பி.எஸ். இடங்களுடன் "மாதா மருத்துவக் கல்லூரி' தொடங்க இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.

தமிழகத்தில் சிறுபான்மை அந்தஸ்துடன் சுயநிதியில் தொடங்கப்படும் முதல் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியாகும் இது.

மருத்துவக் கல்வி தேர்வுக் குழு மூலம் நடத்தப்படும் அரசு ஒதுக்கீட்டு கலந்தாய்வுக்கு 75 எம்.பி.பி.எஸ். இடங்களை (50 சதவீத இடங்கள்) அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கல்லூரியின் தலைவர் பீட்டர் தெரிவித்தார். கடந்த 14 ஆண்டுகளாக மாதா பொறியியல் கல்லூரி, மாதா செவிலியர் கல்லூரி உள்ளிட்டவற்றை இந்தக் குழுமம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

11-வது சுயநிதி கல்லூரி: தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் கீழ் ஏற்கெனவே செயல்பட்டு வரும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி, கோவை பி.எஸ்.ஜி. உள்ளிட்ட 10 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளிடமிருந்து 767 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைப்பது உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் உள்ள ஒன்பது சுயநிதி மருத்துவக் கல்லூரிகளுக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் ஏற்கெனவே ஒப்புதல் அளித்து விட்டது. திருச்சி அருகே உள்ள சென்னை மருத்துவக் கல்லூரிக்கு (எஸ்ஆர்எம் குழுமம்) விரைவில் புதுப்பித்தல் அனுமதி கிடைத்து விடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் சென்னை போரூர் அருகே கோவூர் தண்டலத்தில் 11-வது சுயநிதி கல்லூரியாகத் தொடங்கப்பட்டுள்ள புதிய மாதா மருத்துவக் கல்லூரியிலிருந்தும் அரசு ஒதுக்கீட்டுக்கு 75 இடங்கள் கிடைக்க உள்ளது.

இதையடுத்து நடப்புக் கல்வி ஆண்டில் (2011-12) அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களின் எண்ணிக்கை 842-ஆக அதிகரிக்கும்.

அதிக கட்-ஆஃப் காரணமாக...: அதிக கட்-ஆஃப் மதிப்பெண் காரணமாக எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு கடும் கட்-ஆஃப் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அரசு ஒதுக்கீட்டுக்கு மாதா மருத்துவக் கல்லூரி மூலம் மேலும் 75 எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைப்பது மாணவர்களுக்கு சாதகமான அம்சமாகும்.

மற்ற கல்லூரிகளின் அடிப்படையில், மாதா மருத்துவக் கல்லூரியின் சுயநிதி அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடத்துக்கு ஆண்டுக் கட்டணமாக ரூ.2.25 லட்சத்தை நீதிபதி குழு நிர்ணயிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.