"ஆழ்கடல் டியூனா' மீன்பிடிப் படகுகள் வாங்க வழங்கப்படும் மானியம் 50 சதவீதமாக உயர்த்தப்படும் என்றும் அதற்காக ரூ.30 கோடி ஒதுக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
சட்டப் பேரவையில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட 2013-14-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் இது குறித்து கூறப்பட்டிருப்பதாவது:
"ஆழ்கடல் டியூனா' மீன்பிடிப் படகுகளை வாங்குவதற்கு வழங்கப்படும் மானியம் 25 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தப்படும். இதற்காக ரூ. 30 கோடி ஒதுக்கப்படும். இதன் மூலம் ஆழ்கடல் மீன்பிடி முறைக்கு நமது மீனவர்கள் மாறுவார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக 23 மீன் இறங்கு தளங்கள் மற்றும் நான்கு மீன்பிடித் துறைமுகங்கள் தொடர்பான பணிகள் நடைபெற்று வருகின்றன. கடலூர், பழையாறு, நாகப்பட்டினம், தூத்துக்குடி ஆகிய இடங்களில் மீன்பிடித் துறைமுகங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
ரூ.7.78 கோடியில் புதிய மீன் இறங்கு தளம்: கடலூர் மாவட்டம் முடசலோடையில் ரூ. 7.78 கோடியில் புதிய நவீன மீன் இறங்கு தளம் அமைக்கப்படும். பொதுத் துறை, தனியார் துறை மூலமாக ராமநாதபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இரண்டு மீன் பதப்படுத்தும் பூங்காக்கள் அமைக்கப்படும்.
நாகூர், பரங்கிப்பேட்டையில் தலா ரூ.10 கோடியில் படகுகள் பாதுகாப்பாக சென்றுவர வசதியாக முகத்துவாரங்கள் சீரமைக்கப்படும். மீன் வளத் துறைக்காக 2013-14-ம் ஆண்டில் ரூ. 467.44 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சுதந்திர போராட்டத் தியாகியா உதயநிதி? அமைச்சர் ரமேஷ் கேள்வி

சிறுபான்மை சமூகத்தினரின் வாழ்க்கைத்தரம் கணிசமாக மேம்பட்டுள்ளது: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

நூறு சாமி திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு - புகைப்படங்கள்

டி20 உலகக் கோப்பை: ஸ்மிருதி மந்தனா அரைசதம்; பாகிஸ்தானுக்கு 171 ரன்கள் இலக்கு!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


