முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலைக்கு படகுப் போக்குவரத்து தொடக்கம்

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலைக்கு 4 மாதங்களுக்குப் பிறகு படகுப் போக்குவரத்து திங்கள்கிழமை தொடங்கியது.

News image
Updated On :2 ஜூலை 2013, 1:26 am IST

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலைக்கு 4 மாதங்களுக்குப் பிறகு படகுப் போக்குவரத்து திங்கள்கிழமை தொடங்கியது.

கன்னியாகுமரி அருகே கடலில் அமைந்துள்ள பாறையொன்றில் அமைந்துள்ளது 133 அடி உயர திருவள்ளுவர் சிலை. கடந்த 1.1.2000-ல் திறந்து வைக்கப்பட்ட இச்சிலையை பார்வையிடுவதற்காக படகுகள் மூலம் நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் நேரில் பார்வையிட்டு வருகின்றனர்.

உப்புக் காற்றால் சிலை சேதமடையாமல் இருப்பதற்காக 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை பாலிசிலிக்கான் என்னும் ரசாயனக் கலவை பூசப்படுகிறது. சிலை அமைக்கப்பட்ட பின்

3-வது முறையாக ரசாயனக் கலவை பூசும் பணி கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இதற்கான பணியை நெய்வேலியைச் சேர்ந்த தனியார் நிறுவனம் செய்து வந்தது.

சிலையில் ரசாயனக் கலவை பூசும் பணி கடந்த ஜூன் 15-ம் தேதி நிறைவடைந்த நிலையில் 4 மாதங்களுக்குப் பிறகு திங்கள்கிழமை படகுப்  போக்குவரத்து தொடங்கியது.

திருவள்ளுவர் சிலையைப் பார்க்க ஏராளமான சுற்றுலாப் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு வழக்கம் போல் காலை 8 மணிக்கு படகுப் போக்குவரத்து தொடங்கிய நிலையில் திருவள்ளுவர் சிலைக்கு காலை 9 மணிக்கு முதல் படகு 150 பயணிகளுடன் சென்றது.

திடீர் நிறுத்தம்: திருவள்ளுவர் சிலைக்கு 3 முறை படகுகள் சென்று வந்த நிலையில் திடீரென சிலை அமைந்துள்ள படகுத் தளத்தில் நீர்மட்டம் குறைந்து விட்டது. இதனால் பகல் 11 மணிக்கு படகுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஆனால் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு மாலை 4 மணி வரை படகுகள் இயக்கப்பட்டன. முதல் நாளே படகு சேவை தடைப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.