மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சட்டப் பேரவையில் பேரவைத் தலைவர் புகழ்ந்து பேசியதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

சட்டப் பேரவையில் பேரவைத் தலைவர் புகழ்ந்து பேசியதற்கு, திமுக பொருளாளரும், கட்சியின் பேரவைக் குழு தலைவருமான மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, பேரவைக்கு வெளியே செய்தியாளர்களுக்கு திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டி:

News image
Updated On :24 ஆகஸ்ட் 2015, 12:25 pm

குறிஞ்சிவேலன்

சட்டப் பேரவையில் பேரவைத் தலைவர் புகழ்ந்து பேசியதற்கு, திமுக பொருளாளரும், கட்சியின் பேரவைக் குழு தலைவருமான மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, பேரவைக்கு வெளியே செய்தியாளர்களுக்கு திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டி:

கூட்டத்தொடர் குறித்து ஏற்கனவே கடந்த 21 ஆம் தேதி அலுவல் ஆய்வுக்குழு கூடி எத்தனை நாள் நடத்துவது என்று முடிவு செய்து உள்ளது.

அதன்படி முதல் நாளில் முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பும், குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாம், இசை அமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், முன்னாள் அமைச்சர் செந்தூர் பாண்டியன் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தீர்மானமும் கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதற்கான நிகழ்ச்சி நிரல் முன்கூட்டியே உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால் பேரவை கூடியதும் இந்த மரபுப்படி நடக்காமல் முதல்வரை பாராட்டும் வகையில் பேரவைத் தலைவர் புகழ்ந்து பேசுகிறார்.

அவர் பேச, பேச 50 முறை அமைச்சர்களும் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்களும் மேஜையை தட்டி வரவேற்கிறார்கள். பேரவைத் தலைவர் பேசிய பிறகு, முதல்வர் ஜெயலலிதா பாராட்டுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இருகரம் கூப்பி வணங்குகிறார். எங்களை பொறுத்தவரை இந்த நிகழ்ச்சிகளை நாளைக்கு வைத்து இருக்கலாம்.

பேரவை கூட்டத்தொடரில் மதுவிலக்கை அமல்படுத்துவது குறித்து பேரவைத் தலைவரிடம் தனிநபர் தீர்மானம் எழுதி கொடுத்து இருக்கிறோம். செவ்வாய்க்கிழமையே விவாதிக்க வேண்டும் என்றார்.

விஜயதாரணி (காங்கிரஸ்): காங்கிரஸ் கட்சி சார்பிலும் மதுவிலக்கு தொடர்பாக, தனிநபர் மசோதா கொடுத்து உள்ளேன். செவ்வாய்க்கிழமையன்று மற்ற அலுவல்களை ஒத்தி வைத்து மதுவிலக்கு தொடர்பாக விவாதம் செய்ய கேட்டு உள்ளோம். வெங்காய விலை உயர்வு மின்கட்டணம், பால்விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்தும் சட்டசபையில் பேசுவோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.