அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

இளம் பெண்ணைக் கடத்திச் சென்றவருக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை

ராஜபாளையம் அருகே இளம் பெண்ணை, திருமணம் செய்து கொள்வதாகக் கூறி கடத்திச் சென்றவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து திங்கள்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது.

News image
Updated On :7 டிசம்பர் 2015, 2:49 pm

கோ.ஜெயக்குமார்

ராஜபாளையம் அருகே திருமண வயது அடையாத பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி கடத்திச் சென்றவருக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து திங்கள்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது.

ராஜபாளையம், தளவாய்புரம்-செட்டியார்பட்டியைச் சேர்ந்தவர் பிச்சைப்பாண்டி-சாந்தி தம்பதியினரின் மகளும் தளவாய்புரம்-முத்துச்சாமிபுரம் கண்ணன் மகன் முத்துராஜ் (26) என்பவரும் காதலித்து வந்துள்ளார்கள்.

முத்துராஜ்,  பிச்சைப்பாண்டி மகளை, அவர்  திருமண வயதை எட்டாவதவர் என்று தெரிந்தும், திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 21.1.2012-ம் தேதி திருச்செந்தூருக்கு கடத்திச் சென்றுள்ளார். அங்கு சாமி கும்பிட்ட பின்னர் மண்டபம் ஒன்றில் தங்க வைத்திருந்துள்ளார்.

இது குறித்து தளவாய்புரம் காவல் நிலையத்தில் சாந்தி கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, முத்துரைஜைக் கைது செய்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி என்.ராஜலட்சுமி, திருமண வயதை அடையாத பெண்ணைக் கடத்திச் சென்ற குற்றத்திற்காக (இ.த.ச.366-ஏ) முத்துராஜூக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபரதாதமும் விதித்துத் தீர்ப்புக் கூறினார். அபராதம் கட்டத் தவறினால் மேலும் ஓராண்டு சிறைத் தண்டனை விதித்தும் நீதிபதி தீர்ப்புக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.