அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

டேங்கர் லாரி வெடித்து சேதம்: ரூ.2.03 லட்சத்தை ரூ.10 ஆயிரம் இழப்பீட்டுடன் வழங்க ஆணை

டேங்கர் லாரி வெடித்து சேதமுற்றதற்கான செலவுத் தொகை ரூ.2,03,250-யை ரூ.10 ஆயிரம் இழப்பீட்டுத் தொகையுடன் வழங்க விருதுநகர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் செவ்வாய்கிழமை உத்தரவிட்டது.

News image
Updated On :15 டிசம்பர் 2015, 10:58 am

கோ.ஜெயக்குமார்

டேங்கர் லாரி வெடித்து சேதமுற்றதற்கான செலவுத் தொகை ரூ.2,03,250-யை ரூ.10 ஆயிரம் இழப்பீட்டுத் தொகையுடன் வழங்க விருதுநகர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் செவ்வாய்கிழமை உத்தரவிட்டது.

சிவகாசி, சாத்தூர் சாலையைச் சேர்ந்தவர் மீனாட்சி. இவர் பாண்டி ஏஜென்ஸி என்ற பெயரில் டேங்கர் லாரி வைத்திருந்தார். வண்டிக்கு தகுதிச் சான்றிதழ் பெறுவதற்காக வர்ணம் பூச வேண்டியிருந்தது. இதற்காக டு பிரண்டஸ் பெயிண்டர் செட் என்ற நிறுவனத்தில் லாரியை 8.1.09- ம் தேதி விட்டிருந்தார். மறுநாள் மேலாளர் பால்ராஜ், வேலையாள் மூர்த்தி ஆகியோரை வண்டியைப் போய் பார்த்து வரக் கூறியுள்ளார்.

டேங்கர் லாரியில் தண்ணீர் நிரப்பி வைக்கப்படிருந்துள்ளது. மூர்த்தி ஏறி, மூடியை அகற்ற முயன்றுள்ளார். அப்போது மேலாளர் பால்ராஜ் புகை பிடிக்க சிகரெட் பற்றவைத்துள்ளார். அப்போது டேங்கர் தீப்பற்றி வெடித்துள்ளது. இதில் மூர்த்தி தூக்கி எறியப்பட்டு பலத்த காயமுற்றார். பால்ராஜ் சிறிய காயமுற்றார். இது குறித்து சிவகாசி கிழக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

டேங்கர் லாரி, 28.11.08 முதல் 27.11.09 முடிய சிவகாசி தி யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனியில் காப்பீடு செய்யப்பட்டிருந்தது. வண்டியை பழுது பார்த்த வகையில் 2.67 லட்சம் செலவு ஆனதாக காப்பீட்டு நிறுவனத்திற்கு 9.1.09-ல் கடிதம் எழுதியுள்ளார்கள். ஆனால் காப்பீட்டு நிறுவனம் 3.12.09-ம் தேதி கோரிக்கையை நிராகரித்துவிட்டது.

இதனையடுத்து மீனாட்சி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் மனு அளித்தார்.

காப்பீட்டு நிறுவனம் சார்பில், தகுதிச் சான்று முடிவடைந்த லாரியை பொது இடத்தில் வைத்திருந்தது தவறு. மேலும் வாகனத்தில் தண்ணீர் நிரப்பி வைக்கப்படவில்லை. வண்டியை பழுது பார்த்த வகையில் ரூ.1,20,765.25 மட்டுமே செலவு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

மனுவை மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி வ.பாலசுந்தரகுமார், உறுப்பினர்கள் ச.சங்கர், ச.கற்பகச்செல்வி ஆகியோர் விசாரித்தனர். இறுதியாக சிவகாசி, தி யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம், டேங்கர் லாரி சேத வகைக்கு நஷ்ட ஈடாக ரூ.2,03,250 யை புகார் தாக்கல் செய்த நாளிலிருந்து தொகை கொடுத்து தீர்க்கும் வரை 6 சதவீத வட்டியுடன் 1 மாதத்திற்குள் வழங்க வேண்டும். மன கஷ்டத்திற்கு ரூ.10 ஆயிரம், வழக்குச் செலவிற்கு ரூ.3 ஆயிரம் சேர்த்து வழங்கவும் தீர்ப்பு வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.