அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஸ்ரீவில்லிபுத்தூர்: தொடர் திருட்டில் ஈடுபட்ட இளைஞரை போலீஸில் ஒப்படைத்த பொதுமக்கள்

ஸ்ரீவில்லிபுத்தூரில் தொடர் திருட்டில் ஈடுபட்ட நபரை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.

News image
Updated On :15 டிசம்பர் 2015, 11:35 am

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூரில் தொடர் திருட்டில் ஈடுபட்ட நபரை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர், ராமகிருஷ்ணாபுரத்தை அடுத்துள்ள கடைகள் தொடங்கி அரசு போக்குவரத்துப் பணிமனை வரையுள்ள பல்வேறு கடைகளில் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து குறிப்பிட்ட நபர் திருடி வந்துள்ளார். ஒருவரின் பையிலிருந்த ரூ.1200, இரு சக்கர வாகனங்களில் உள்ள உதிரி பாகங்கள் உள்ளிட்ட பல்வேறு திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்று வந்துள்ளது. இரு நாட்களுக்கு முன்னர் குறிப்பிட்ட நபரை அதிகாலை அப் பகுதியைச் சேர்ந்தவர்கள் பிடிக்க முற்பட்டபோது, சில அடி தூரத்தில் குறிப்பிட்ட நபர் தப்பி ஓடிவிட்டார்.

செவ்வாய்கிழமை காலை இதே சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு எதிரேயுள்ள மரக்கடை உள்ளிட்ட கடைகளின் பின்புறம் வழியே இந்த இளைஞர் இறங்கி திருடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கதவைப் பூட்டி வைத்து திருடனைப் பிடித்து கட்டி வைத்தனர். பின்னர் இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். வெகு நேரத்திற்கு பின்னர் ஒரு போலீஸார் வந்து திருடனை இரு சக்கர வாகனத்தில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்.

இது குறித்து இப் பகுதியில் உள்ளவர்கள் கூறுகையில், போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபடுவதில்லை. தொடர் திருட்டுச் சமபவங்கள் குறித்து தெரிந்தும் அதனை பொருட்படுத்தாமல் உள்ளார்கள் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.