முல்லைப் பெரியாறு அணையில் கேரள போலீஸ்சுக்கு மாற்றாக பாதுகாப்பு பணியில் மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீஸாரை ஈடுபடுத்த வலியுறுத்தி அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் கம்பத்தில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கம்பம் தலைமை தபால் நிலையம் எதிரே அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில், முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பில் மத்திய தொழில் பாதுகாப்பு படையை ஈடுபடுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கரு.நகராஜன் தலைமை வகித்தார். மாநில கொள்கை பரப்பு செயலாளர் ஆர் ஜெயபிரகாஷ், மாவட்ட செயலாளர் வி.ஏ.முருகன், கம்பம் ஒன்றிய செயலாளர் அல்லிபாலா, நகர செயலாளர் செல்வராமர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்பாட்டத்தில் கேரள அரசை கண்டித்தும், அணைக்கு பாதுகாப்பு மத்திய தொழில் பாதுகாப்பு படையை ஈடுபடுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜ் பேசியதாவது:- முல்லைப் பெரியாறு அணையில் பல்வேறு இடையூறுகளுக்கு இடையில் அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தி கொள்ள உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், அதை செயல்படுத்த முடியாமல் தடுத்து கேரள அரசு தனிச்சட்டம் கொண்டுவந்தது,