மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

இளைஞர்கள் கடின உழைப்பை கடைப்பிடிக்க வேண்டும்: ஏ.பி.ஜெ. அப்துல்கலாம்.

இளைஞர்கள் கடின உழைப்பை கடைப்பிடிக்க வேண்டும் என்றார் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம்.

News image
Updated On :18 ஜூலை 2015, 2:24 pm

இளைஞர்கள் கடின உழைப்பை கடைப்பிடிக்க வேண்டும் என்றார் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம்.

கரூர் மாவட்டம்,அரவக்குறிச்சியில் பள்ளி விழாவில் பங்கேற்க செல்வதற்காக திருச்சி சுற்றுலா மாளிகையிலிருந்து புறப்பட்ட போது, செய்தியாளர்களை அவர் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியது:

ஈகைத் திருநாளாம் ரம்ஜான் வாழ்த்துகளை பொதுமக்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைய நிலையில் இளைஞர்கள் தங்களது அறிவுத்திறனை பெருக்கிக் கொள்ள வேண்டும். கடின உழைப்பு, பிரச்னைகளைக் கண்டு அஞ்சாமை ஆகிய மூன்றும் இளைஞர்களுக்கு இருக்க வேண்டும். இந்த மூன்றும் இருந்தால் அவர்கள் வாழ்வில் அனைத்தும் வெற்றிதான்என்றார் அப்துல்கலாம்.

அரியலூர் மாவட்டம்,ஜெயங்கொண்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இயற்கை வேளாண் கருத்தரங்கிலும், அதைத் தொடர்ந்து அரியலூரில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவிலும் பங்கேற்ற முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம், இரவு திருச்சி சுற்றுலா மாளிகையில் தங்கினார்.

சனிக்கிழமை கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தனியார் பள்ளியில் நடைபெற்ற விழாவிலும், அதைத் தொடர்ந்து மதுரை நிகழ்ச்சியிலும் பங்கேற்ற அப்துல்கலாம் மீண்டும் திருச்சி வந்து, விமானம் மூலம் புதுதில்லி புறப்பட்டுச் சென்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.