கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ஆலங்குடியில் வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார் வட்டாட்சியர்

புதுகை மாவட்டம் ஆலங்குடியில், தினமணி நாளிதழ், ஹொலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இணைந்து வியாழக்கிழமை வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை நடத்தியது.

News image
Updated On :21 ஏப்ரல் 2016, 9:00 am

பார்திபன்

ஆலங்குடி: புதுகை மாவட்டம் ஆலங்குடியில், தினமணி நாளிதழ், ஹொலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இணைந்து வியாழக்கிழமை வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை நடத்தியது.

சட்டப்பேரவை தேர்தலில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி தமிழகம், புதுச்சேரியில் தினமணி நாளிதழ், கல்வி நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களோடு  இணைந்து வாக்காளர் விழிப்புணர்வு பேரணி, கையெழுத்து இயக்கம் உள்ளிட்ட விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டுவருகிறது.

இதன்தொடர்ச்சியாக, ஆலங்குடி, அரசமரம் பேருந்துநிறுத்தம் அருகே வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்விற்கு ஆலங்குடி ஹோலிகிராஸ் மெட்ரிக் பள்ளியின் முதல்வர் கருப்பையா தலைமை வகித்தார். காவல் ஆய்வாளர் பன்னீர்செல்வம், போக்குவரத்து காவல் ஆய்வாளர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டாட்சியரும்,ஆலங்குடி தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவருமான, ரெங்கராஜன் விழிப்பணர்வு கையெழுத்து இயக்கத்தை தொடங்கிவைத்தார்.

இதில், அப்பகுதி வணிகர்கள், பொதுமக்கள் கட்டாயம் வாக்களிப்போம், பணத்திற்காக வாக்குகளை விற்கமாட்டோம், நல்லவரை தேர்ந்தெடுப்போம்,100% வாக்களித்து ஜனநாய கடமையாற்றுவோம் என்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகையில் கையெழுத்திட்டு, வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர். ஆலங்குடி வருவாய் ஆய்வாளர் இஸ்மாயில், கிராம நிர்வாக அலுவலர்கள் ராதாகிருஷ்ணன், மாரீஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.