/

போர்க்குணம் மிக்கவர் ஜெயலலிதா: மோடி புகழாரம்!

மாநிலங்களவை கூட்டத்திற்கு வந்திருந்த அதிமுக எம்பிக்களிடம் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் குறித்து பிரதமர் மோடி விசாரித்து அறிந்தார்.

News image
Updated On :25 ஜனவரி 2024, 6:26 am

DIN

புதுதில்லி: மாநிலங்களவை கூட்டத்திற்கு வந்திருந்த அதிமுக எம்பிக்களிடம் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் குறித்து பிரதமர் மோடி விசாரித்து அறிந்தார்.

ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற பிரதமரின் அறிவிப்பு குறித்து மாநிலங்களவையில் இன்று விவாதம் நடந்தது. இந்த விவாதத்தில் பங்கேற்பதற்காக வந்திருந்த பிரதமர் மோடி, அங்கிருந்த அதிமுக மாநிலங்களவை  உறுப்பினர்கள் குழுத்தலைவர் மைத்ரேயன் மற்றும் எம்பி நவநீத கிருஷ்ணன் ஆகியோரிடம் முதல்வர்  ஜெயலலிதவின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.

முதல்வர் நலமுடன் இருப்பதாக அவர்கள் பிரதமரிடம் தெரிவித்தனர். பின்னர் அவர்களிடம் பேசிய பிரதமர் மோடி முதல்வர் ஜெயலலிதா போர்க்குணம் மிக்கவர் என்று பாராட்டிப் பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.