புதுச்சேரி சட்டப்பேரவையில் குழுக்களை அமைக்க ஸ்டாலின் வலியுறுத்துவாரா? அதிமுக கேள்வி
புதுச்சேரி சட்டப்பேரவையில் பல்வேறு குழுக்களை அமைக்க தமிழக எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்துவாரா என அதிமுக கேள்வி எழுப்பி உள்ளது.


புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையில் பல்வேறு குழுக்களை அமைக்க தமிழக எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்துவாரா என அதிமுக கேள்வி எழுப்பி உள்ளது.
புதுவை சட்டப்பேரவை அதிமுக கட்சித் தலைவர் ஆ. அன்பழகன் எம்.எல்.ஏ. வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக சட்டப்பேரவையி்ல் மதிப்பீட்டுக்குழு, மனுக்கள் குழு, பொதுக்கணக்கு குழு உள்பட பல்வேறு குழுக்களை அமைக்கவில்லை எனக்கூறி சட்டப்பேரவைத் தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்படும். மேலும் தமிழக ஆளுநரிடம் புகார் செய்வோம் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இவ்வாறு செய்வதற்கு முன்பு அவர் தங்களது கட்சி கூட்டணி வைத்துள்ள புதுச்சேரியில் ஆட்சி செய்யும் காங்கிரஸ் அரசு செயல்பாடுகள் குறித்து அவர் அறிந்திருக்க வேண்டும். புதுவைில் தேர்தல் நடைபெறறு 5 மாதங்கள் ஆகின்றன. சட்டப்பேரவையில் மனுக்கள் குழு, மதிப்பீட்டுக்குழு, பொதுக்கணக்கு குழு உள்பட 12-க்கு மேற்பட்ட குழுக்களை இதுவரை அமைக்க நாராயணசாமி அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
மேலும் பொதுக்கணக்கு குழு, மதிப்பீட்டுக்குழு, மனுக்கள் குழுக்களுக்கு முறையாக பேரவையில் தேர்தல் நடத்த வேண்டும். ஆனால் எதையும் காங்கிரஸ் அரசு மேற்கொள்ளவில்லை. இதுகுறித்து தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்து வாரா. காங்கிரஸ் அரசுக்கு அளித்து வரும் ஆதரவை திமுக வாபஸ் பெறுமா என்பதை ஸ்டாலி்ன் தெளிவுபடுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...