மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சென்னை நாம் தமிழர் கட்சி பேரணியில் வாலிபர் தீக்குளிப்பு முயற்சி!

காவிரி நதிநீர் பங்கீட்டில் உரிமை கோரி சென்னையில் நாம்  தமிழர் கட்சியினர் இன்று சீமான் தலைமையில் நடத்திய பேரணியில்,  வாலிபர் ஒருவர்  தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

News image
Updated On :15 செப்டம்பர் 2016, 10:22 am

DIN

காவிரி நதிநீர் பங்கீட்டில் உரிமை கோரி சென்னையில் நாம்  தமிழர் கட்சியினர் இன்று சீமான் தலைமையில் நடத்திய பேரணியில்,  வாலிபர் ஒருவர்  தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

காவிரி நதி நீர் பங்கீடு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்று, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதில் கர்நாடகா சுணக்கம் காட்டுவதைக் கண்டித்தும், நதிநீரில் தமிழகத்திற்கு உள்ள உரிமையை வலியுறுத்தியும், சென்னை எழும்பூரில் நாம் தமிழர் கட்சியினர் இன்று பேரணி நடத்தினார்கள்.

இந்த பேரணிக்கு கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை  வகித்தார். பேரணியில் இயக்குனர்கள் அமீர், சேரன் மற்றும் ரவிமரியா ஆகியோர் பங்கேற்றனர். நூற்றுக்கணக்கான நாம் தமிழர் கட்சி உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

சென்னை புதுப்பேட்டையை பேரணி நெருங்கி கொண்டிருந்த வேளையில், நாம் தமிழர் கட்சி தொண்டர் ஒருவர் திடீரென தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.உடலில் மண்ணெணெய் ஊற்றி பற்ற வைத்துக் கொண்ட வரை, அங்கிருந்தவர்கள் மற்றும் காவல்துறையினர் சேர்ந்து மருத்துவமனைக்கு அழைத்துச்  சென்றனர். 

இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.