மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சமூக வலைத்தளங்களில் பயன்படுத்தப்படும் இரட்டை இலை சின்னம்: மைத்ரேயன் குற்றச்சாட்டு! 

தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்ட பின்னரும் அதிமுக அம்மா அணியினரால் சமூக வலைத்தளங்களில் இரட்டைஇலை சின்னம் பயன்படுத்தப்படுவதாக ..

News image
Updated On :5 ஏப்ரல் 2017, 7:46 am

DIN

சென்னை: தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்ட பின்னரும் அதிமுக அம்மா அணியினரால் சமூக வலைத்தளங்களில் இரட்டைஇலை சின்னம் பயன்படுத்தப்படுவதாக அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியினைச் சேர்ந்த மாநிலங்களைவை உறுப்பினர் மைத்ரேயன் குற்றம் சாட்டியுள்ளார்.

அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியினைச் சேர்ந்த மாநிலங்களைவை உறுப்பினர் மைத்ரேயன் இன்று காலை மாநில தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை அவருடையை அலுவலகத்தில் சந்தித்து ஆர்.கே.நகரில் நிகழும் தேர்தல் முறைகேடுகள் குறித்துபுகாரளித்தார்.  பின்னர் வெளியில் வந்து செய்தியாளர்களிடம் பேசும் பொழுது அவர் தெரிவித்ததாவது:

அதிமுகவின் சின்னமான இரட்டை இலை தேர்தல் ஆணையத்தால் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதிமுக அம்மா அணியினர் சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம் செய்யும் பொழுது இரட்டைஇலை சின்னத்தை பயன்படுத்துகின்றனர். அத்துடன் அந்த சின்னமானது தனக்கு மட்டுமே உரியது போன்று தினகரன் செயல்படுகிறார்.

மேலும் ஆர்.கே,நகரில் பணப்பட்டுவாடாவை தடுக்க இந்திய தேர்தல் ஆணையம் தவறி விட்டது. ஓட்டுக்கு ரூ.4000 என்ற வகையிகள் தினகரன் அணியினர் பணப் பட்டுவாடாவை நடத்தி முடித்து விட்டனர்.

இவ்வாறு மைத்ரேயன் தன்னுடைய பேட்டியில் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.