ஏனென்றால் இதுவரை வருமான வரித்துறை சோதனைக்குள்ளான கரூர் அன்புநாதன், நத்தம் விஸ்வநாதன், சைதை துரைசாமி, ராம்மோகன்ராவ் உள்ளிட்ட அனைவர் மீதும் எந்த தொடர் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த வருமான வரித்துறை சோதனைகள் ஏதோ ஜெயலலிதாவின் மரணம் போலவே “மர்மமாக” இன்னும் நீடிக்கிறது. இன்றைக்கு சுகாதாரத்துறை செயலாளர் வரை நீளும் வருமான வரித்துறை சோதனை மணல் மாபியா சேகர் ரெட்டி விஷயத்தில் ஏன் பொதுப்பணித்துறை அமைச்சர், செயலாளர்கள் வரை நீளவில்லை என்ற நியாயமான சந்தேகமும் மக்களுக்கு எழுகிறது. மக்களின் வரிப்பணத்தை சூறையாடி, மக்களுக்கான திட்டங்கள் எதையும் நிறைவேற்றாமல், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கூட ஏற்படுத்தாமல் ஊழல் செய்தால் போதும் என்ற ஒரே லட்சியத்துடன் ஒட்டு மொத்த அதிமுக ஆட்சியும், அமைச்சர்களும் செயல்பட்டது- இப்போதும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதே உண்மை. இதற்கு பல நேர்மையான ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் பலியாகி விட்டது உள்ளபடியே வருத்தமளிக்கிறது. மிகச்சிறந்த தமிழக அரசின் நிர்வாகம் இப்படி ஊழல் அமைச்சர்களால் இன்று நிலை குலைந்து இந்திய மாநிலங்களில் தமிழகத்திற்கு மிகப்பெரிய அவப்பெயரைத் தேடித் தருகிறதே என்பதை நினைத்துப் பார்க்கும் போது மிகவும் வேதனையாக இருக்கிறது.