இந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து ஒரு தண்டனை: விஜயகாந்த் 

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருப்பது ஒரு தண்டனை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :10 ஏப்ரல் 2017, 8:11 am

DIN

சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருப்பது ஒரு தண்டனை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவால் காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஆளுங்கட்சியினரால் வாக்காளர்களுக்கு சரளமாக பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, இந்திய தேர்தல் ஆணையம் நேற்றிரவு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்வதாக அறிவித்தது.

இந்நிலையில் இது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருப்பது, நியாயமாக நேர்மையாக இந்த தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று விரும்பியவர்களுக்கு எல்லாம் ஒரு தண்டனை.

மேலும் பணப்பட்டுவாடா புகார்கள் எழுந்தால், பணம் கொடுத்த கட்சியின் வேட்பாளர் மட்டும் தகுதி நீக்கம் செய்யப்படலாம்.

இவ்வாறு விஜயகாந்த் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.