ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

வேலூர் அருகே தனியார் பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து: இடிபாடுகளில் சிக்கியுள்ள 20 பேர்!

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகேயுள்ள கோரந்தங்கலில் புதிதாக கட்டப்பட்டு வரும் தனியார் பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் ...

News image
Updated On :13 ஏப்ரல் 2017, 11:07 am

DIN

வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி அருகேயுள்ள கோரந்தங்கலில் புதிதாக கட்டப்பட்டு வரும் தனியார் பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்தனர். இடிபாடுகளில் 20 பேர் சிக்கியுள்ளனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகேயுள்ள கிராமம் கோரந்தங்கல். இங்கே தனியார் பள்ளிக்கான கட்டிடமொன்று புதிதாக கட்டப்பட்டு வந்தது. இதற்கான கட்டுமான பணிகளில் 20-கும் மேற்பட்டோர் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் இன்று கட்டுமானப்பணிகள் நடைபெற்று வந்த பொழுது எதிர்பாராத விதமாக கட்டிடத்தின் ஒரு பகுதி அப்படியே சரிந்து விழுந்தது. இதில் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இடிபாடுகளில் மேலும் 20 பேர் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது. அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.