தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

டிடிவி தினகரன் வழக்கறிஞருடன் ஆலோசனை

அதிமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சென்னையில் இன்று வழக்கறிஞருடன் ஆலோசனையில் ஈடுபட்டார். 

News image
Updated On :18 ஏப்ரல் 2017, 4:54 am

தினமணி

அதிமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சென்னையில் இன்று வழக்கறிஞருடன் ஆலோசனையில் ஈடுபட்டார். 

அதிமுகவுக்குரிய 'இரட்டை இலை' தேர்தல் சின்னத்தை வி.கே.சசிகலா தலைமைக்கு ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் தர இடைத்தரகராக செயல்பட முயன்றதாக, தில்லியில் சுகேஷ் சந்திரசேகர் என்பவரை மாநகர காவல்துறையின் குற்றப்பிரிவு கைது செய்துள்ளது.

இந்த விவகாரத்தில் சசிகலா தலைமைக்கு சாதகமாக செயல்பட அதிமுக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் மூலம் ரூ.1.30 கோடி தனக்கு வந்ததாக சுகேஷ் சந்திரசேகர் கூறியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இந்த விவகாரத்தில் சுகேஷ் சந்திரசேகர், டி.டி.வி.தினகரன் ஆகியோருக்கு எதிராக தில்லி காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. 

இந்த விவகாரம் தொடர்பாக டி.டி.வி.தினகரனிடம் விசாரணை நடத்துவதற்காக குற்றப்பிரிவு காவல் துறை குழு ஓரிரு தினங்களில் சென்னைக்கு வரவுள்ளது. இந்நிலையில் அதிமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று காலை சென்னை பெசன்ட் நகரில் உள்ள தனது இல்லத்தில் வழக்கறிஞருடன் ஆலோனையில் ஈடுபட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.