யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

எந்த நிபந்தனைகளும் இன்றி பேச்சு வார்த்தைக்கு தயார்: அதிமுக எம்.பி.வைத்திலிங்கம் அறிவிப்பு!

அதிமுகவின் இரு அணிகளும் இணைந்து செயல்படுவது தொடர்பாக ஓ.பி.எஸ் அணியினருடன் எந்த நிபந்தனைகளும் இன்றி பேச்சுவார்த்தைக்கு தயார் ...

News image
Updated On :20 ஏப்ரல் 2017, 12:03 pm

DIN

சென்னை: அதிமுகவின் இரு அணிகளும் இணைந்து செயல்படுவது தொடர்பாக ஓ.பி.எஸ் அணியினருடன் எந்த நிபந்தனைகளும் இன்றி பேச்சுவார்த்தைக்கு தயார் என்று அதிமுக எம்.பி.வைத்திலிங்கம் அறிவித்துள்ளார்.

தலைமைச் செயலகத்தில்  இன்று மாலை முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பின்னர் அதிமுகவின் ராஜ்யசபா எம்.பி.வைத்திலிங்கம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது:

அதிமுகவின் இரு அணிகளும் இணைந்து செயல்படுவது தொடர்பாக ஓ.பி.எஸ் அணியினருடன் பேச குழுக்கள் அமைக்கப்படும். இதற்கு எங்கள் தரப்பில் எந்த விதமான நிபந்தனைகளும் இல்லை. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நல்லாட்சி தொடர வேண்டும் என்பதும், அதற்காக இரட்டை இலை சின்னம் மீட்கப்பட வேண்டும் என்பதே எங்கள் பிரதான நோக்கங்களாகும். இதுவே அனைத்து தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளின் விருப்பமாகும்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டுமென்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.தற்பொழுது இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கில் நீதிமன்றம் என்ன சொல்கிறதோ அதனை நிறைவேற்ற இந்த அரசு தயாராக உள்ளது.

இவ்வாறு வைத்திலிங்கம் தெரிவித்தார்.

சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்திருப்பது அவர்கள்தான். அவர்கள் அதனை வாபஸ் பெற்று விட்டால் மேற்கொண்டு எதுவும் இல்லை என்று பேட்டியின் பொழுது உடனிருந்த சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.