எந்த நிபந்தனைகளும் இன்றி பேச்சு வார்த்தைக்கு தயார்: அதிமுக எம்.பி.வைத்திலிங்கம் அறிவிப்பு!
அதிமுகவின் இரு அணிகளும் இணைந்து செயல்படுவது தொடர்பாக ஓ.பி.எஸ் அணியினருடன் எந்த நிபந்தனைகளும் இன்றி பேச்சுவார்த்தைக்கு தயார் ...


சென்னை: அதிமுகவின் இரு அணிகளும் இணைந்து செயல்படுவது தொடர்பாக ஓ.பி.எஸ் அணியினருடன் எந்த நிபந்தனைகளும் இன்றி பேச்சுவார்த்தைக்கு தயார் என்று அதிமுக எம்.பி.வைத்திலிங்கம் அறிவித்துள்ளார்.
தலைமைச் செயலகத்தில் இன்று மாலை முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பின்னர் அதிமுகவின் ராஜ்யசபா எம்.பி.வைத்திலிங்கம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது:
அதிமுகவின் இரு அணிகளும் இணைந்து செயல்படுவது தொடர்பாக ஓ.பி.எஸ் அணியினருடன் பேச குழுக்கள் அமைக்கப்படும். இதற்கு எங்கள் தரப்பில் எந்த விதமான நிபந்தனைகளும் இல்லை. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நல்லாட்சி தொடர வேண்டும் என்பதும், அதற்காக இரட்டை இலை சின்னம் மீட்கப்பட வேண்டும் என்பதே எங்கள் பிரதான நோக்கங்களாகும். இதுவே அனைத்து தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளின் விருப்பமாகும்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டுமென்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.தற்பொழுது இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கில் நீதிமன்றம் என்ன சொல்கிறதோ அதனை நிறைவேற்ற இந்த அரசு தயாராக உள்ளது.
இவ்வாறு வைத்திலிங்கம் தெரிவித்தார்.
சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்திருப்பது அவர்கள்தான். அவர்கள் அதனை வாபஸ் பெற்று விட்டால் மேற்கொண்டு எதுவும் இல்லை என்று பேட்டியின் பொழுது உடனிருந்த சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...