வேண்டாதவர்கள் மீது மட்டும் வருமான வரித் துறை சோதனை ஏன்?: மு.க.ஸ்டாலின் கேள்வி
அரசுக்கு வேண்டாதவர்கள் மீது ஒருதலைப்பட்சமாக வருமான வரித் துறை சோதனை நடத்தப்படுவது ஏன் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.


அரசுக்கு வேண்டாதவர்கள் மீது ஒருதலைப்பட்சமாக வருமான வரித் துறை சோதனை நடத்தப்படுவது ஏன் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: கர்நாடக மாநிலத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்கியுள்ள விடுதிகளிலும், அது தொடர்பான காங்கிரஸ் தலைவர்கள் வீடுகளிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தியுள்ளது.
வருமான வரித் துறை உள்ளிட்ட அமைப்புகள் ஒரு தலைப்பட்சமாக அரசுக்கு வேண்டாதவர் மீது மட்டுமே சோதனை நடத்துவதற்காக இயக்கப்படுவது இந்திய ஜனநாயகத்துக்கோ, சட்டத்தின் ஆட்சிக்கோ எந்த விதத்திலும் ஏற்றது இல்லை.
எனவே, வருமான வரித்துறை, சிபிஐ, அமலாக்கத் துறை போன்ற அமைப்புகளை பாஜகவின் அரசியல் எதிரிகளுக்கு எதிராகப் பயன்படுத்தும் போக்கினை பிரதமர் நரேந்திர மோடி தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...