புதுவையில் போராட்டக்குழுவினரை கலைக்க முயற்சிக்க மாட்டோம்: முதல்வர் நாராயணசாமி
புதுச்சேரியில் ஜல்லிக்கட்டு தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருவோரே அதை நிறைவு செய்வது குறித்து நல்ல முடிவை அறிவிக்க வேண்டும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.


புதுச்சேரி: புதுச்சேரியில் ஜல்லிக்கட்டு தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருவோரே அதை நிறைவு செய்வது குறித்து நல்ல முடிவை அறிவிக்க வேண்டும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
அண்ணா நகரில் பாப்ஸ்கோ சார்பில் புதிய காய்கறிக் கடையை திங்கள்கிழமை முதல்வர் திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஜல்லிக்கட்டுக்காக மாணவ, மாணவியர் அமைதியான முறையில் புதுவையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தில் சட்டப்பேரவையில் ஜல்லிக்கட்டு தொடர்பான சட்டம் நிறைவேற்றப்படுகிறது. புதுச்சேரி சட்டப்பேரவையிலும் ஜல்லிக்கட்டு தொடர்பாக உரிய முடிவெடுக்கப்படும்.
மாணவியர் போராட்டம் நடைபெறும் இடத்தில் அதிகளவு உள்ளதால், அங்கு இரவு நேரத்தில் கூடுதலாக பெண் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் போராட்டம் நடத்தி வரும் மாணவ, மாணவியரை கலைக்கும் முயற்சியில் போலீஸார் ஈடுபட மாட்டார்கள். போராட்டக்காரர்களே நல்ல முடிவை எடுத்து அறிவிக்க வேண்டும் என்றார் நாராயணசாமி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...