ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

கலாம் நினைவு தின அமைதிப் பேரணி: விராலிமலையில் இன்று நடைபெற்றது

முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜெ அப்துல் கலாமின் இரண்டாம் ஆண்டு நினைவு தின அமைதி ஊர்வலம், விராலிமலையில் இன்று நடைபெற்றது.

News image
Updated On :27 ஜூலை 2017, 7:15 am

சி. உதயகுமார்

முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜெ அப்துல் கலாமின் இரண்டாம் ஆண்டு நினைவு தின அமைதி ஊர்வலம், விராலிமலையில் இன்று நடைபெற்றது.
 
தினமணி நாளிதழும், விராலிமலை விவேகா மெட்ரிக்பள்ளியும் இணைந்து, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜெ.அப்துல் கலாமின் 2-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, விராலிமலையில் வியாழக்கிழமை அமைதி ஊர்வலம் நடைபெற்றது.
 
விராலிமலை காமராஜர் நகர் முன்பிருந்து காலை 10 மணிக்கு ஊர்வலம் தொடங்கி, கடைவீதி, சோதனைச்சாவடி, வடக்குரத வீதி வழியாகச் சென்று புதிய பேருந்து நிலையத்தில் நிறைவு பெற்றது.
 
இந்த ஊர்வலத்தை, முன்னாள் அரசு பள்ளி தலைமையசிரியர் புலவர் ச. சந்தானமூர்த்தி தொடங்கிவைத்தார். இதில் விராலிமலை விவேகா பள்ளித்தாளாளர் வெல்கம்மோகன், இயக்குநர் எம். அருண்பிரசாத், காவல் உதவி ஆய்வாளர் இசைவாணி உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.