கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

மதுரை எம்எல்ஏ சரவணன் சொன்னது என்ன? முழு விவரம் (விடியோ)

அதிமுக ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மதுரை எம்எல்ஏ சரவணன், தனியார் தொலைக்காட்சி ஒன்றில், சசிகலா அணி தரப்பில் தங்களிடம் பேரம் பேசப்பட்டதாக கூறிய விடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :13 ஜூன் 2017, 7:31 am

DIN


சென்னை: அதிமுக ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மதுரை எம்எல்ஏ சரவணன், தனியார் தொலைக்காட்சி ஒன்றில், சசிகலா அணி தரப்பில் தங்களிடம் பேரம் பேசப்பட்டதாக கூறிய விடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக ஏம்எல்ஏக்கள், சசிகலா அணி, பன்னீர்செல்வம் அணி என இரண்டாக பிரிந்த போது, கூவத்தூர் விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த அதிமுக எம்எல்ஏக்களில், மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ சரவணன், அங்கிருந்து தப்பி வந்து பன்னீர்செல்வம் அணியில் சேர்ந்தார்.

தோற்றத்தை மாற்றிக் கொண்டு கூவத்தூர் சொகுசு விடுதியில் இருந்து தப்பி வந்ததாக அவர் அப்போது பரபரப்பான பேட்டியை அளித்திருந்தார். 

இந்த நிலையில், தனியார் தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் அவர் பேசிய விடியோ நேற்று வெளியானது. ஆங்கில தனியார் தொலைக்காட்சியில் வெளியான இந்த விடியோவால் தமிழக அரசியலில் மீண்டும் ஒரு பரபரப்பு தொற்றிக் கொண்டது.

அந்த விடியோவில் பதிவாகியுள்ள முழு விவரம் வருமாறு, 
கேள்வி : கூவத்தூர் எப்படி இருந்தது? 
கூவத்தூரில் எந்த தப்பும் நடக்கவில்லை, அங்கு ஊடகங்களில் சொன்னது போல பெண்கள் எல்லாம் இல்லை, மிரட்டல் விடுக்கப்படவில்லை. தண்ணி மட்டுமே இருந்தது.

கேள்வி: பேரம் கமிட் பண்ணினார்களா
கமிட் எல்லாம் பண்ணவில்லை. சொல்லப் போனால் நேரடியாக எதுவுமே பேசவில்லை. பேருந்தில் ஏறும் போது 2 சொன்னார்கள். கூவத்தூர் போனதுமே 4 என்று சொன்னார்கள். அதாவது ஏர்போர்ட் போகும் போது 2 ஆக இருந்தது பிறகு கவர்னரை பார்க்கப் போகும் போது 4 ஆக ஆனது. அப்புறம் 6 என்று சொன்னார்கள். இப்படி ஏற்றிக் கொண்டே போகிறார்களே கொடுப்பார்களா என்று தோன்றியது.

அடுத்த நாள் வந்து எங்குமே பணம் இல்லையாம், எனவே, பணத்துக்குப் பதிலாக தங்கம் தருகிறோம் என்று சொன்னார்கள். அடடா பணம் கொடுத்தாலும் அதை எடுத்துக் கொண்டு போய் தங்கம் தான் வாங்க வேண்டும். அங்கும் ஏமாற்றி விடுவார்கள். எப்படி வாங்குவது என்று தெரியாது. எனவே எல்லா பிரச்னையும் முடிந்துவிட்டது. 
 

YouTube video thumbnail

அந்த நொடியே பேசியதை கொடுத்திருந்தால் யாருமே அந்த அணியை விட்டு வந்திருக்க மாட்டார்கள். அவ்வளவு ஏன், திறந்துவிட்டுவிட்டு அவரவர் வீட்டுக்குப் போங்கள் என்று சொல்லிவிட்டிருந்தாலே போதும். இதுவரை ஆட்டு மந்தைகள் போலத்தானே இருந்தோம். எந்த கேள்வியும் யாரும் கேட்டதில்லையே. எங்க வந்து கூப்பிட்டாலும் கையெழுத்து போடுங்கள் என்று சொல்லியிருந்தாலே போதும். எல்லாரும் வந்திருப்பார்கள்.

அதை விட்டுவிட்டு கூவத்தூரில் போட்டு அடைத்துவைத்துவிட்டு, மீடியாக்கள் மூலமாக மக்களுக்குத் தெரிந்து எல்லாமே போச்சு என்று முடித்திருக்கிறார்.
 

YouTube video thumbnail

3 எம்எல்ஏக்கள் மட்டும் பணத்தை வாங்கி விட்டார்கள். இவர்களுக்கு அதிகபட்ச தொகை வழங்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் கூட கிடைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.