இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

இரட்டைஇலை சின்னத்திற்கு லஞ்சம்: டி.டி.வி.தினகரனுக்கு மே 15-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்ட இரட்டைஇலை சின்னத்தினை மீண்டும் பெறுவதற்காக, ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்ததாக தொடரப்பட்ட வழக்கில் ...

News image
Updated On :1 மே 2017, 10:05 am

DIN

புதுதில்லி: தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்ட இரட்டைஇலை சின்னத்தினை மீண்டும் பெறுவதற்காக, ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்ததாக தொடரப்பட்ட வழக்கில் டி.டி.வி.தினகரனுக்கு மே 15-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன். அதிமுகவில் ஏற்பட்ட பிளவினால் அக்கட்சியின் சின்னமான இரட்டை இலை தற்பொழுது தேர்தல் ஆணையத்தினால் முடக்கப்பட்டுள்ளது. முடக்கப்பட்ட சின்னத்தினை திரும்பப்பெற ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்ததாக தொடரப்பட்ட வழக்கில் டி.வி.தினகரன் கைது செய்யயப்பட்டுள்ளார். தில்லி ஹசாரி பார்க் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட தினகரனை விசாரணை செய்யும் பொருட்டு ஐந்து நாள் போலீஸ் காவல் அளித்து நீதின்றம் உத்தரவிட்டது. 

அதனைத் தொடர்ந்து சென்னைக்கு அவரை அழைத்து வந்த போலீஸஸர அவரது வீட்டில் சோதனை நடத்தினார்கள்.மேலும் சில சோதனைகளும் முடிந்த நிலையில், போலீஸ் காவல் முடிந்து தில்லி நீதிமன்றத்தில் தினகரன் இன்று ஆஜர் படுத்தப்பட்டார். அவருடன் அவரது நண்பர் நாகார்ஜுனாவும் ஆஜர் செய்யப்பட்டார்.

அப்பொழுது இருவருக்கும் மே 15-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் தினகரனுக்கு பாதுகாப்பு பிரச்சினை இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே அவரை நேரில் நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்கு பதிலாக காணொளி காட்சி மூலம் விசாரணை நடத்த அனுமதி கோரி போலீசார் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவினை ஏற்றுக் கொண்ட நீதிபதி அனுமதியளித்து உத்தரவிட்டார்.

அதே சமயம் தினகரன் தரப்பில் அவருக்கு ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அவரை ஜாமீனில் விட்டால் சாட்சிகளை கலைத்து விடுவதற்கான சாத்தியங்கள் உள்ளதாக தில்லி,மாநில காவல்துறை சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கபட்டது. அதனைத் தொடர்ந்து அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.