என்எல்சி இந்தியா நிறுவன ஒப்பந்தத் தொழிலாளர்கள் சென்னையில் வெள்ளிக்கிழமை நடத்த இருந்த போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
கடலூர் மாவட்டம், நெய்வேலியில் உள்ள என்எல்சி இந்தியா நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை சாஸ்திரி பவனில் உள்ள மண்டல தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்திருந்தனர்.
இந்த நிலையில், நெய்வேலியில் மத்திய துணை முதன்மை தொழிலாளர் நல ஆணையர் சீனிவாஸ், புதுச்சேரி உதவி தொழிலாளர் நல ஆணையர் கணேசன், ஒப்பந்தத் தொழிலாளர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பினர் பங்கேற்ற பேச்சுவார்த்தை விருந்தினர் இல்லத்தில் வியாழக்கிழமை இரவு நடந்தது.
பேச்சுவார்த்தையில் முதன்மை தொழிலாளர் நல ஆணையர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க முற்றுகைப் போராட்டம் 10 நாள்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.