பத்திரிகையாளர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்

பத்திரிகையாளர்களின் நலன்கள் சார்ந்த கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்கப்படும் என்று என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உறுதி அளித்தார்.
Updated on
1 min read

பத்திரிகையாளர்களின் நலன்கள் சார்ந்த கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்கப்படும் என்று என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உறுதி அளித்தார்.
தேசிய பத்திரிகையாளர் தினத்தை ஒட்டி, சென்னை தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களை அவர் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது, பத்திரிகையாளர்களுக்கு வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகளில் ஒதுக்கீட்டை அதிகரிப்பது, பத்திரிகையாளர்களுக்கென தனியான திட்டத்தை வரையறுப்பது உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
இதற்குப் பதிலளித்த முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, பத்திரிகையாளர்களின் கோரிக்கைகள் மீது சட்டத்துக்குட்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
நிவாரண நிதி: புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நாளிதழ் புகைப்படக் கலைஞர் மாதவனின் மருத்துவ சிகிச்சை செலவுக்கான நிதியாக ரூ.3.50 லட்சத்தை அவரிடமே முதல்வர் பழனிசாமி வழங்கினார். 
சிறப்பு நல நிதியுதவித் திட்டத்தின் கீழ், அவருக்கு நிவாரண நிதி அளிக்கப்பட்டதாக தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com