அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

5 நாள்கள் பரோல் முடிந்தது: சிறைக்குத் திரும்பினார் சசிகலா

5 நாள்கள் பரோல் முடிந்ததால், அதிமுக (அம்மா அணி) பொதுச் செயலாளர் சசிகலா வியாழக்கிழமை (அக்.12) பெங்களூரில் உள்ள மத்திய சிறைக்குத் திரும்பினார்.

News image
5 நாள்கள் பரோல் முடிவடைந்த நிலையில், வியாழக்கிழமை பெங்களூரு மத்திய சிறைக்கு காரில் வந்த சசிகலா.
Updated On :12 அக்டோபர் 2017, 11:47 pm

DIN

5 நாள்கள் பரோல் முடிந்ததால், அதிமுக (அம்மா அணி) பொதுச் செயலாளர் சசிகலா வியாழக்கிழமை (அக்.12) பெங்களூரில் உள்ள மத்திய சிறைக்குத் திரும்பினார்.
வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் சொத்துகள் குவித்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று கடந்த பிப்.15 ஆம் தேதி முதல் அதிமுக (அம்மா அணி) பொதுச் செயலாளர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறையில் உள்ளனர்.
இதனிடையே, சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நிலை பாதிக்கப்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தனது கணவர் நடராஜனைச் சந்திப்பதற்காக 233 நாள்கள் சிறைவாசத்துக்குப் பிறகு, கடந்த அக்.6-ஆம் தேதி பரோலில் வந்தார் சசிகலா.
சிறையிலிருந்து கார் மூலம் சென்னைக்குச் செல்லவும், மீண்டும்பெங்களூருக்குத் திரும்பவும் தலா ஒரு நாள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதால், அக்.7-ஆம் தேதி முதல் ஐந்து நாள்கள் பரோல் காலம் கணக்கிடப்பட்டது. அதன்படி, அக்.11-ஆம் தேதி புதன்கிழமை பரோல் காலம் நிறைவு பெற்றது. 
இதைத் தொடர்ந்து, வியாழக்கிழமை சென்னையில் இருந்து கார் மூலம் புறப்பட்ட சசிகலா, மாலை 4.30 மணி அளவில் பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறைக்கு வந்தார். அவருடன், அதிமுக (அம்மா அணி) துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், விவேக் உள்ளிட்டோர் வந்திருந்தனர். சசிகலாவை வரவேற்க மத்திய சிறைக்கு முன்பாக அவரது ஆதரவாளர்கள் ஏராளமானோர் குவிந்திருந்தனர்.
5 நாள்கள் பரோல் முடிவடைந்த நிலையில், வியாழக்கிழமை  பெங்களூரு மத்திய சிறைக்கு காரில் வந்த சசிகலா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.