எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

சுற்றுச்சூழல் பாதுகாப்பு: ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு பசுமை விருதுகள்

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக சிறப்பாகப் பணியாற்றிய மாவட்ட ஆட்சியர்களுக்கு பசுமை விருதுகளை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை அளித்தார்.

News image
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறந்து விளங்கிய மாவட்ட ஆட்சியர்களுக்கு பசுமை விருதுகள் வழங்கி கௌரவித்த முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.
Updated On :12 அக்டோபர் 2017, 9:49 pm

DIN

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக சிறப்பாகப் பணியாற்றிய மாவட்ட ஆட்சியர்களுக்கு பசுமை விருதுகளை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை அளித்தார்.
இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு: 
மாவட்டத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக சிறப்பாகச் செயலாற்றும் மாவட்ட ஆட்சியர்களை ஊக்கப்படுத்தும் நோக்கத்துடன், ஒவ்வோர் ஆண்டும் மூன்று பேருக்கு பசுமை விருதுகளை தமிழக அரசு வழங்கி வருகிறது.
2014-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரையிலான மூன்று ஆண்டுகளுக்கு விருதுகள் மாவட்ட ஆட்சியர்களுக்கு அளிக்கப்பட்டன. 2014-இல் கே.விவேகானந்தன் (தருமபுரி), கே.எஸ்.பழனிசாமி (தேனி), அர்ச்சனா பட்நாயக் (கோவை), 2015-இல் எஸ்.பிரபாகர் (ஈரோடு), பொ.சங்கர் (நீலகிரி), ச.ஜெயந்தி (கரூர்), 2016-இல்ஆசியா மரியம் (நாமக்கல்), ந.வெங்கடாசலம் (தேனி), அ.ஞானசேகரன் (திருவண்ணாமலை) ஆகியோருக்கு பசுமை விருதுகளை முதல்வர் பழனிசாமி அளித்தார்.
நிறுவனங்களுக்கு விருதுகள்: 2015-ஆம் ஆண்டில் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறந்து விளங்கிய "தி ராம்கோ சிமென்ட்ஸ்', கூடங்குளம் அணுமின் நிலையம், "மிசெலின் இந்தியா', "லேன்கோ தஞ்சாவூர் பவர்' ஆகிய நிறுவனங்களுக்கும், 2016-ஆம் ஆண்டில் கோஸ்டல் எனர்ஜன், ஹூண்டாய் மோட்டார்ஸ், டால்மியா ஆகிய நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறந்து விளங்கிய மாவட்ட ஆட்சியர்களுக்கு பசுமை விருதுகள் வழங்கி கௌரவித்த முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.