இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

குட்கா விவகாரம்: திமுக எம்எல்ஏ-க்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு

குட்கா விவகாரம் தொடர்பான நோட்டீஸ் மீது 21 திமுக உறுப்பினர்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் செவ்வாய்கிழமை வழக்கு தொடர்ந்தனர்.

News image
Updated On :5 செப்டம்பர் 2017, 11:41 am

DIN

சட்டப்பேரவையில் குட்காவைக் காண்பித்தது குறித்து பேரவைத் தலைவர் தனபால் விளக்கம் கேட்டு மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 எம்எல்ஏ-க்களுக்கு நோட்டீஸ் அனுப்பினார். 

இந்த நோட்டீஸூக்கு விளக்கம் அளிப்பதற்கான காலக்கெடு செவ்வாய்க்கிழமையுடன் (செப்.5) முடிவடைய உள்ளது. 

இதுகுறித்து மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.எல்.ஏ.க்களின் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (செப்.5) நடைபெற்றது. 

நோட்டீஸ் பெறப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் அண்ணா அறிவாலயத்தில் திங்கள்கிழமை மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

பேரவைத் தலைவர் அனுப்பியுள்ள நோட்டீஸ் சட்டத்துக்கு உட்பட்டதாகத் தெரியவில்லை. அதனால், இதுகுறித்து விளக்கம் அளிக்க 15 நாள்கள் அவகாசம் அளிப்பது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்பட்டதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில், சட்டப்பேரவை உரிமைக்குழு அனுப்பிய நோட்டீஸுக்கு எதிராக திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது. எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏ-க்கள் 21 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பேரவைத் தலைவர் நடவடிக்கை மீது வழக்கு தொடர்ந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.