அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வழக்கு அக்.3-ந் தேதி ஒத்திவைப்பு

சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு பெரும்பான்மையை நிரூபிக்கும் வழக்கு ஒத்திவைப்பு.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:49 pm

DIN

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு, சட்டப்பேரவையில் பெம்பான்மையை நிரூபிக்க வேண்டி ஆகஸ்டு 24-ந் தேதி பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

அதிமுக-வின் 19 சட்டப்பேரவை உறுப்பினர்களும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசின் மீதான ஆதரவை திரும்பப் பெறுவதாக அறிவித்தனர். 

எனவே, தமிழக சட்டப்பேரவையில் ஆளும் அதிமுக அரசு பெம்பான்மையை நிரூபிக்க வேண்டும். இவ்விவகாரம் தொடர்பாக தமிழக ஆளுநர் வித்தியாசாகர் ராவ் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

பேரவை உறுப்பினர்களே முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என்று கூறியபோதும், இதுவரை தமிழக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை. 

எனவே அதனை உடனே விரைந்து நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என புகழேந்தி என்ற வழக்கறிஞர், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கு மீதான விசாரணை செவ்வாய்கிழமை நடந்தது. இதையடுத்து, இவ்வழக்கு மீதான விசாரணையை அக்டோபர் 3-ந் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.