இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

வீட்டிலேயே இருக்கலாமே. . . தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேலுக்கு நீதிபதி யோசனை

பொதுக்குழுவுக்கு அழைப்பு வந்தால் அதனை நிராகரித்துவிட்டு வீட்டிலேயே இருந்திருக்கலாமே என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி யோசனை கூறினார்.

News image
Updated On :11 செப்டம்பர் 2017, 6:45 am

DIN


சென்னை: பொதுக்குழுவுக்கு அழைப்பு வந்தால் அதனை நிராகரித்துவிட்டு வீட்டிலேயே இருந்திருக்கலாமே என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி யோசனை கூறினார்.

செவ்வாய்க்கிழமை நடைபெறவிருக்கும் அதிமுக அம்மா அணி மற்றும் புரட்சித் தலைவி அம்மா அணியினரின் பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம், நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் வகையில் மனு தாக்கல் செய்த வெற்றிவேலுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

அதிமுக அம்மா அணி மற்றும் புரட்சித் தலைவி அம்மா அணியின் பொதுக் குழு மற்றும் செயற்குழு நாளை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு நாளை கூடுகிறது.

இந்த நிலையில், அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல் தொடர்ந்த மனுவில், அதிமுக பொதுக்குழுவைக் கூட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணிக்கு உரிமையில்லை என்று கூறியிருந்தார்.

மனுவை இன்று விசாரணைக்கு ஏற்ற உயர் நீதிமன்ற நீதிபதி, அதிமுக பொதுக் குழுக் கூட்டத்துக்கு தடை விதிக்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்ததோடு, வழக்குத் தொடர்ந்த எம்எல்ஏ வெற்றிவேலுக்கு சில யோசனைகளையும் வழங்கினார்.

அதாவது, இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தை அணுகியதற்கு பதில் தேர்தல் ஆணையத்தை அணுகி இருக்கலாமே என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, பொதுக்குழு குறித்து யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் அழைப்பு விடுக்கப்பட்டால் நோட்டிஸை நிராகரித்துவிட்டு வீட்டிலேயே இருக்கலாமே.

அல்லது பொதுக்கூட்டத்துக்குச் சென்று கூட்டத்தில் பங்கேற்காமல் வெறுமனே சாப்பிட்டுவிட்டும் வரலாம். அல்லது வீட்டிலேயே இருக்கலாம். 

அதிமுக அம்மா அணியும், புரட்சித் தலைவி அம்மா அணியும் இணைந்து நடத்தும் பொதுக்குழுவில் உங்கள் அணியும் கலந்து கொள்ளலாமே என்றும் நீதிபதி தெரிவித்தார்.

மேலும், பொதுக்குழுவை கூட்ட தடை கோரி வெற்றிவேல் என்பவர்  தனிப்பட்ட முறையில்தான் வழக்குத் தொடர்ந்துள்ளார். எனவே, நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் வகையில் மனு தாக்கல் செய்ததற்காக வெற்றிவேலுவுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படுவதாகவும் நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.