பதினெட்டு எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்த விவகாரத்தில் நீதிமன்றத்தின் மூலம் தீர்வு காண்போம் என்றார் டி.டி.வி. தினகரன்.
திருச்சியில் செப். 19-இல் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னையிலிருந்து திருச்சிக்கு திங்கள்கிழமை மாலை தினகரன் காரில் புறப்பட்டார்.
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், பாடாலூரில் அவரது ஆதரவாளர்கள் வரவேற்பு அளித்தனர். அப்போது, செய்தியாளர்களுக்கு தினகரன் அளித்த பேட்டி:
18 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது ஜனநாயக படுகொலை.
சட்டப்பேரவையை கூட்டி எடப்பாடி கே. பழனிசாமி தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.
எங்களுக்கு, மேலும் 10-க்கும் மேற்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. எனவே, எடப்பாடி தலைமையிலான அரசு கவிழ்வது உறுதி. எடப்பாடி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுமாறு தமிழக ஆளுநருக்கு மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும். இல்லையென்றால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய அரசை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்றார் தினகரன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!
தொகுதி நலனுக்காக தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம்

மே 30 - நெல்லை - திருச்செந்தூர் முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம்!

அதிமுக எம்.எல்.ஏக்கள் தவெகவில்... ஆரோக்கியமான அரசியலுக்கு ஏற்புடையதல்ல: சிபிஎம் விமர்சனம்!
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy



