தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

சென்னை விமான நிலையத்தில் புதிய முனையம்

விமான பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் உயர்ந்து வருவதை கருத்தில் கொண்டு, சென்னை விமான நிலையத்தில் புதிய முனையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

News image
Updated On :20 செப்டம்பர் 2017, 9:55 pm

DIN

விமான பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் உயர்ந்து வருவதை கருத்தில் கொண்டு, சென்னை விமான நிலையத்தில் புதிய முனையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மத்திய விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்தார்.
இதுதொடர்பாக, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியது: 
சென்னை விமான நிலையத்தில் கடந்த சில ஆண்டுகளாக பயணிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. ஆண்டுக்கு 2 கோடி பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். இது அடுத்த சில ஆண்டுகளில் 3 கோடி முதல் 3 .5 கோடியாக உயரும். இதைக் கருத்தில் கொண்டு புதிய முனையம் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. பயணிகளின் பயன்பாடு, தேவைக்கேற்ப விமான நிலையத்தின் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும். சென்னைக்கு அருகே புதிய பசுமை விமான நிலையம் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
விமான போக்குவரத்து மூலம் சிறு நகரங்களை இணைக்கும் திட்டமான உடான் திட்டத்தின் கீழ், சென்னையில் இருந்து மைசூருக்கு விமான சேவை புதன்கிழமை (செப். 20) தொடங்கப்பட்டுள்ளது. இதேபோல் விஜயநகர் -ஹைதராபாத்துக்கு விமான சேவை வியாழக்கிழமை தொடங்குகிறது. இந்தியாவில் 75 ஆண்டுகால விமானப் போக்குவரத்து சேவையில் மிகப்பெரிய வெற்றியாக உடான் திட்டம் அமைந்துள்ளது. ஆண்டுக்கு ஒரு விமான நிலையம் வீதம், 75 விமான நிலையங்கள் தற்போது உள்ள நிலையில், உடான் திட்டத்தின்கீழ், ஓர் ஆண்டில் 30 புதிய விமான நிலையங்கள் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சென்னையை தவிர, திருச்சி, கோவை, மதுரை ஆகிய விமான நிலையங்களிலும் சர்வதேச விமானப் போக்குவரத்து மேற்கொள்ளப்படுகிறது. இந்தச் சேவையை அதிகரிக்க முயற்சி எடுக்கப்படுகிறது. இதேபோல், சிறுநகரங்களிலும் விமான சேவையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.