அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஓ.பன்னீர்செல்வம் உட்பட 12 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி திமுக வழக்கு

கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உட்பட 12 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திமுக சார்பில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

News image
Updated On :25 செப்டம்பர் 2017, 7:32 am

DIN


சென்னை: கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உட்பட 12 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திமுக சார்பில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

தினகரன் அணியில் இணைந்து, முதல்வருக்கு எதிராக ஆளுநரிடம் மனு கொடுத்த 18 எம்எல்ஏக்களும், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், தினகரன் அணியில் இணைந்த 18 எம்எல்ஏக்களும் தகுதி நீக்கம் செய்யப்படும் போது, தனி அணியாக பிரிந்து செயல்பட்ட ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மீது அவைத் தலைவர் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலர் டிடிவி தினகரன், திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இந்த நிலையில், இதே கருத்தை வலியுறுத்தி, ஓ. பன்னீர்செல்வம் உட்பட 12 எம்எல்ஏக்களை பதவி நீக்கம் செய்யக் கோரி திமுக கொறடா சக்ரபாணி சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது முதல்வருக்கு எதிராக ஓ. பன்னீர்செல்வம் உட்பட 12 பேரும் வாக்களித்தனர். இது தொடர்பாக வெற்றிவேல், ரெங்கசாமி உள்ளிட்ட எம்எல்ஏக்கள் அவைத் தலைவரிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் கீழ் ஓ. பன்னீர்செல்வம் உட்பட  12 பேரையும் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் அவசர வழக்காக புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.