பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது! தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் தேர்வெழுத வந்த இளைஞர்கள் திடீர் ரயில் மறியல் - கல்வீச்சு! ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்ந்து அதிகரிப்புஇந்தியாவில் 100 % எத்தனால் எரிபொருள்: மத்திய அமைச்சர் கட்கரி ஒப்புதல்தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்புஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலைக் கொண்டுவர நடவடிக்கைதேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைய திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் முடிவுமாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை நெருங்கும் பாஜக கூட்டணி!
/

தமிழகத்தில் ஆறு மாதத்துக்குள் ஆட்சி மாற்றம் ஏற்படும்: வாகை சந்திரசேகர்

தமிழகத்தில் அடுத்த ஆறு மாதங்களுக்குள் ஆட்சி மாற்றம் ஏற்படும் என வலங்கைமானில் நடைபெற்ற திமுக பொதுக் கூட்டத்தில் பேசிய வாகை சந்திரசேகர் கூறினார்.

News image
Updated On :22 மார்ச் 2017, 8:06 am IST

தமிழகத்தில் அடுத்த ஆறு மாதங்களுக்குள் ஆட்சி மாற்றம் ஏற்படும் என வலங்கைமானில் நடைபெற்ற திமுக பொதுக் கூட்டத்தில் பேசிய வாகை சந்திரசேகர் கூறினார்.

வலங்கைமான் மேற்கு, கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் இளைஞர் எழுச்சி நாள் திமுக பொதுக் கூட்டம் வலங்கைமான் கடை வீதியில் அண்மையில் நடைபெற்றது. திருவாரூர் மாவட்ட செயலாளர் பூண்டி கே.கலைவாணன் தலைமை வகித்தார். மாநில கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான வாகை சந்திரசேகர் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசியது:
மொழி, இனம், கலாசாரம் ஆகியவற்றை திமுக தொடர்ந்து காத்துவருகிறது. தமிழகத்தில் இசை நாற்காலியில் உட்காருவதைப்போல் முதலமைச்சர்கள் மாறிமாறி உட்கார்ந்து வருகிறார்கள். தமிழகத்தில் அடுத்த ஆறு மாதங்களுக்குள் ஆட்சிமாற்றம் ஏற்படும் என்றார்.

கூட்டத்தில், ஒன்றியச் செயலாளர்கள் தெட்சிணாமூர்த்தி (கிழக்கு), வீ.அன்பரசன் (மேற்கு),  இளைஞர் அணி தலைவர் செல்லையன், மகளிர் அணி துணை அமைப்பாளர் பவானி, நகரச் செயலாளர் சிவநேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.