தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

'செயற்கை முறையில் பொறிக்கப்பட்ட 15 ஆயிரம் ஆமைக் குஞ்சுகள் கடலில் விடப்பட்டன'

சென்னையில் செயற்கை முறையில் பொறிக்கப்பட்ட சுமார் 15 ஆயிரம் ஆமைக் குஞ்சுகள் பாதுகாப்பாக கடலில் விடப்பட்டுள்ளதாக வனத் துறை தெரிவித்துள்ளது. 

News image

.பொறித்த ஆமைகளை கடலில் விடும் வனத்துறை உள்ளிட்ட இயற்கை ஆர்வலர்கள்.

Updated On :9 ஏப்ரல் 2018, 7:08 pm

சென்னையில் செயற்கை முறையில் பொறிக்கப்பட்ட சுமார் 15 ஆயிரம் ஆமைக் குஞ்சுகள் பாதுகாப்பாக கடலில் விடப்பட்டுள்ளதாக வனத் துறை தெரிவித்துள்ளது. 
இதுகுறித்து கிண்டி சிறுவர் பூங்கா வன உயிரினக் காப்பாளர் அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு உயிர்ப்பன்மை, பசுமையாக்கும் திட்டத்தின்கீழ் சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள கடலோரப் பகுதிகளில் கடல் ஆமைகள் பாதுகாப்பு, பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில், சிற்றாமை இனங்கள் டிசம்பர் முதல் ஏப்ரல் மாதம் வரை தமிழக கடற்கரைப் பகுதிகளில் முட்டையிடுகின்றன. கடந்த 2015-16, 2016-17 ஆண்டுகளில் 22,612 முட்டைகள் செயற்கை முறையில் பொறிக்கப்பட்டு பாதுகாப்பாக கடலில் விடப்பட்டன.
கடந்த 2017-18-ஆம் ஆண்டில் செயற்கை முறையில் பொறிக்கப்பட்ட 15,988 கடல் ஆமைக் குஞ்சுகள் பாதுகாப்பாக கடலில் விடப்பட்டுள்ளன. மேலும், கடல் ஆமைகள், அதன் முட்டைகளைப் பாதுகாக்கும் விதமாக கடல் ஆமைகளை விலக்கும் கருவிகளை இழுவை வலைகளில் பொருத்த மீனவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.