சென்னையில் செயற்கை முறையில் பொறிக்கப்பட்ட சுமார் 15 ஆயிரம் ஆமைக் குஞ்சுகள் பாதுகாப்பாக கடலில் விடப்பட்டுள்ளதாக வனத் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கிண்டி சிறுவர் பூங்கா வன உயிரினக் காப்பாளர் அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு உயிர்ப்பன்மை, பசுமையாக்கும் திட்டத்தின்கீழ் சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள கடலோரப் பகுதிகளில் கடல் ஆமைகள் பாதுகாப்பு, பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில், சிற்றாமை இனங்கள் டிசம்பர் முதல் ஏப்ரல் மாதம் வரை தமிழக கடற்கரைப் பகுதிகளில் முட்டையிடுகின்றன. கடந்த 2015-16, 2016-17 ஆண்டுகளில் 22,612 முட்டைகள் செயற்கை முறையில் பொறிக்கப்பட்டு பாதுகாப்பாக கடலில் விடப்பட்டன.
கடந்த 2017-18-ஆம் ஆண்டில் செயற்கை முறையில் பொறிக்கப்பட்ட 15,988 கடல் ஆமைக் குஞ்சுகள் பாதுகாப்பாக கடலில் விடப்பட்டுள்ளன. மேலும், கடல் ஆமைகள், அதன் முட்டைகளைப் பாதுகாக்கும் விதமாக கடல் ஆமைகளை விலக்கும் கருவிகளை இழுவை வலைகளில் பொருத்த மீனவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தோ்தல் கண்காணிப்புக் குழுக்கள் சோதனையில் ரூ.93.35 லட்சம் பறிமுதல்

வாக்கு எண்ணும் மையம்: ஆட்சியா் ஆய்வு

வாக்குச் சாவடிகளில் அடிப்படை வசதிகள்

சாலையில் தீப்பற்றி எரிந்த காா்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

