குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

மருத்துவ மேற்படிப்பு: ஊக்க மதிப்பெண்கள் தொடர்பான அரசின் ஆணையை ரத்து செய்த உயர் நீதிமன்றம்

மருத்துவ மேற்படிப்பில் மாணவர்களை சேர்க்கும் போது ஊக்க மதிப்பெண்கள் வழங்குவதற்கான பகுதிகளை வகைப்படுத்தி தமிழக அரசு பிறப்பித்த ஆணையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

News image
Updated On :18 ஏப்ரல் 2018, 5:51 pm IST


சென்னை: மருத்துவ மேற்படிப்பில் மாணவர்களை சேர்க்கும் போது ஊக்க மதிப்பெண்கள் வழங்குவதற்கான பகுதிகளை வகைப்படுத்தி தமிழக அரசு பிறப்பித்த ஆணையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

தொலைதூரம், எளிதில் அணுக முடியாத மற்றும் மலைப் பகுதிகளில் பணியாற்றும் அரசு மருத்துவர்கள், மருத்துவ மேற்படிப்பில் சேரும் போது 10 முதல் 30 சதவீதம் வரை ஊக்க மதிப்பெண்கள் பெறுகிறார்கள்.

நடப்பு கல்வியாண்டில் மருத்துவ மேற்படிப்பில் மாணவர் சேர்க்கைக்காக அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்படும் ஊக்க மதிப்பெண்களுக்கான பகுதிகளை வகைப்படுத்தி தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருந்தது.

இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சில மருத்துவர்கள் வழக்குத் தொடர்ந்தனர். இதனை விசாரித்த நீதிபதி எஸ். வைத்தியநாதன், தொலைதூரப் பகுதி மற்றும் எளிதில் அணுக முடியாத பகுதி என வகைப்படுத்தி தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டார்.

முன்னதாக இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, இந்த வழக்கில் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை மருத்துவ மேற்படிப்பிற்கான மாணவர் சேர்க்கையை நடத்தக் கூடாது என மத்திய அரசுக்கும், இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும் உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.