சென்னை: சென்னை அடையாறு இந்தியன் வங்கியில் துப்பாக்கி முனையில் நடந்த வங்கிக் கொள்ளை முயற்சி முறியடிக்கப்பட்டு, பணம் மீட்கப்பட்டுள்ளது.
சென்னை அடையாறு இந்திரா நகர் பகுதியில் இந்தியன் வங்கி ஒன்று அமைந்துள்ளது. வாரத்தின் முதல் நாளான இன்று வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தவும் எடுக்கவும் திரண்டிருந்தனர். திங்களன்று நண்பகலில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வங்கியினுள் நுழைந்துள்ளார். அங்கு பணம் செலுத்த வந்திருந்த வாடிக்கையாளர் ஒருவரிடம், திடீர் என்று துப்பாக்கியை காட்டி ரூ.6 லட்சத்தினை கைப்பற்றியுளார்.
பின்னர் கூடியிருந்தவர்களை துப்பாக்கியைக் காட்டி மிரட்டி அங்கிருந்து அவர் தப்பிக்க முயன்றுள்ளார்.அதன்படி வெளியே வந்தவர் அங்கிருந்து தப்பிக்க முயலும் பொழுது, போக்குவரத்துக் காவலர்கள் மற்றும் பொதுமக்கள் அந்த நபரை சாமர்த்தியமாக மடக்கிப் பிடித்தனர்.
பின்னர் உடனடியாக அவரை இந்திரா நகர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். முதல்கட்ட விசாரணையில் அவர் பிகார் மாநிலத்தினைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உசிலம்பட்டி: மின்னல் பாய்ந்து கூலித் தொழிலாளிகள் 3 பேர் பலி!

அறிமுக உலக யோகாசனம் சாம்பியன்ஷிப்..! ஒலிம்பிக்கில் சேர்க்கவும் திட்டம்!

தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டது உண்மைதான்! ஓ.எஸ். மணியன்

பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து மிட்செல் மார்ஷ் விலகல்!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



