இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

முதல்வர் நாளை தில்லி பயணம்

முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஒரு நாள் பயணமாக புதன்கிழமை (மே 2) காலை தில்லி செல்கிறார். மத்திய அரசின் சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 11:22 pm

DIN

முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஒரு நாள் பயணமாக புதன்கிழமை (மே 2) காலை தில்லி செல்கிறார். மத்திய அரசின் சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு, வியாழக்கிழமை (மே 3) காலை தில்லியில் இருந்து சென்னை திரும்புகிறார்.
மகாத்மா காந்தியடிகள் பிறந்தநாள் நூற்றாண்டு விழா தொடர்பான நிகழ்ச்சி தில்லியில் புதன்கிழமை (மே 2) மாலை நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை காலை சென்னையில் இருந்து தில்லி செல்கிறார். தில்லி செல்லும் அவர் அங்கு மத்திய அரசின் நிகழ்ச்சிகள் பங்கேற்கிறார்.
அமைச்சர்களுடன் சந்திப்பு: தில்லி பயணத்தின் போது, மத்திய அமைச்சர்களை முதல்வர் பழனிசாமி சந்தித்துப் பேச உள்ளதாகத் தெரிகிறது. பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க நேரம் கேட்கப்பட்டுள்ளது. பிரதமர் நேரம் தரும் நிலையில் அவரை, முதல்வர் பழனிசாமி சந்திப்பார் எனவும், பிரதமரைச் சந்திக்க முடியாவிட்டால் மத்திய அமைச்சர்களை அவர் சந்திக்கவுள்ளதாகவும் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
குறிப்பாக, மத்திய நீர்வளத் துறை அமைச்சர் நிதின்கட்கரி உள்ளிட்ட மூத்த அமைச்சர்களை சந்தித்துப் பேசவுள்ளார் என தமிழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.