காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

வண்டலூர் உயிரியல் பூங்காவில் புதிதாக 8 ஜோடி வன விலங்குகள்

சென்னையை அடுத்த வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு கோடிட்ட கழுதைப் புலி, குள்ளநரி, தங்க நிறக்கோழி உள்ளிட்ட 8 ஜோடி வன

News image
Updated On :3 ஆகஸ்ட் 2018, 12:53 am IST


சென்னையை அடுத்த வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு கோடிட்ட கழுதைப் புலி, குள்ளநரி, தங்க நிறக்கோழி உள்ளிட்ட 8 ஜோடி வன விலங்குகள் கர்நாடக மாநிலம், ஸ்ரீ சாமராஜேந்திரா உயிரியல் பூங்காவில் இருந்து புதன்கிழமை கொண்டு வரப்பட்டன.
வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் யானைகள், புலிகள், சிங்கங்கள், சிறுத்தைகள், குரங்குகள், பாலூட்டி இனங்கள் 455, பறவை இனங்கள் 1,433, பாம்பு, முதலை, பல்லி இனங்கள் 424 என மொத்தம் 2,302 வன விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. 
இந்தப் பூங்காவுக்கு தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்தும் மாதம்தோறும் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில், வன விலங்குகளைக் காண வரும் மக்களின் எதிர்பார்ப்பு காரணமாகவும், அவைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் வண்டலூர் பூங்காவுக்கு கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள ஸ்ரீசாமராஜேந்திரா உயிரியல் பூங்காவில் இருந்து 8 ஜோடி வன விலங்குகள் புதன்கிழமை கொண்டு வரப்பட்டுள்ளன.
8 ஜோடி வன விலங்குகள்: இதுகுறித்து வண்டலூர் உயிரியல் பூங்காவின் தலைமை வனப் பாதுகாவலர் யுவராஜ் கூறியது: விலங்குகள் பரிமாற்ற முறையில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து ஒரு ஜோடி வெள்ளைப் புலிகள், இந்திய காட்டுமாடு (ஆண்), ஆண் சிங்கவால் குரங்கு, ஒரு ஜோடி நீலகிரி கருங்குரங்குகள் கர்நாடக மாநிலம், மைசூரில் உள்ள ஸ்ரீ சாமராஜேந்திரா உயிரியல் பூங்காவுக்கு வழங்கப்பட்டுள்ளன. 
அதற்கு மாறாக அங்கிருந்து 2 ஜோடி கோடிட்ட கழுதைப்புலிகள், ஆண் இந்திய காட்டுமாடு, ஒரு ஜோடி லேடி அம்ஹர்ஸ்ட் கோழி, ஒரு ஜோடி குள்ளநரி, ஒரு ஜோடி தங்க நிறக் கோழி, ஒரு ஜோடி சாரஸ் கொக்கு, ஒரு ஜோடி கருப்பு அன்னப்பறவை, ஒரு ஜோடி ஈகிளக்டஸ் கிளி ஆகியவை பெறப்பட்டுள்ளன. 
தற்போது, இந்த வன விலங்குகள் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன. மூன்று வார கண்காணிப்புக்குப் பின் அவற்றை பொதுமக்கள் பார்வையிட முடியும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.