
மருத்துவக் கல்லூரிகளுக்கான அனுமதி முறைகேடாக புதுப்பிக்கப்பட்டதா?: அரசு பதிலளிக்க உத்தரவு
தமிழகத்தில் உள்ள 22 மருத்துவக் கல்லூரிகளுக்கான அனுமதி புதுப்பித்தல் தொடர்பான இந்திய மருத்துவ கவுன்சிலின் கடிதத்துக்கு தமிழக அரசு 8 வார காலத்துக்குள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 22 மருத்துவக் கல்லூரிகளுக்கான அனுமதி புதுப்பித்தல் தொடர்பான இந்திய மருத்துவ கவுன்சிலின் கடிதத்துக்கு தமிழக அரசு 8 வார காலத்துக்குள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் மாற்றம் இந்தியா' அமைப்பின் இயக்குநர் பாடம் நாராயணன் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் உள்ள 22 அரசு மருத்துவக் கல்லூரிகளில் பணியாற்றி வரும் உதவிப் பேராசிரியர்களை, பேராசிரியர்களாக காண்பித்து மருத்துவக் கல்லூரிகளுக்கான அனுமதி புதுப்பிக்கப்பட்டுள்ளதாக நாளிதழ்களில் செய்தி வெளியானது. இதனைத் தொடர்ந்து தமிழக அரசு விளக்கம் அளிக்கக் கோரி இந்திய மருத்துவக் கவுன்சில் கடிதம் அனுப்பியுள்ளது. தமிழக அரசு முறைகேடாக அனுமதியைப் புதுப்பித்திருப்பதால் பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே, அனுமதியை புதுப்பித்து வழங்கிய நடைமுறைகளை மறு ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்ரமணியபிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்திய மருத்துவக் கவுன்சில் தமிழக அரசுக்கு அனுப்பி உள்ள கடிதத்துக்கு தமிழக அரசு 8 வார காலத்துக்குள் பதிலளிக்க வேண்டும். தமிழக அரசு அளிக்கும் பதிலின் அடிப்படையில் இந்திய மருத்துவக் கவுன்சில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





