தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

கணவனுக்கு சூடு போட்டு சித்ரவதை: மனைவி மகன் கைது 

சென்னிமலை அருகே சொத்தை எழுதி கேட்டு, கணவரை அறையில் அடைத்து சூடு போட்டு சித்ரவதை செய்த மனைவி மற்றும் மகனை போலீசாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2018, 6:04 pm IST

பெருந்துறை: சென்னிமலை அருகே சொத்தை எழுதி கேட்டு, கணவரை அறையில் அடைத்து சூடு போட்டு சித்ரவதை செய்த மனைவி மற்றும் மகனை போலீசாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

சென்னிமலை தெற்கு புது வீதியை சோ்ந்தவா் நாராயணசாமி என்கிற ரமேஷ் (50). இவரது மனைவி பெயா் லலிதா (45). மகன் ஸ்ரீநாத் (20). இவா் கல்லூரி படிப்பை முடித்து உள்ளாா். நாராயணசாமி பெயரில், ரூபாய் 2 கோடி மதிப்பிற்கு சொத்து உள்ளது என்றும், மேலும், மாத வாடகை, ரூபாய் 30 ஆயிரம் வருகிறது என்றும் கூறப்படுகிறது.

இதன் காரண்மாக நாராயணசாமியின், மனைவி மற்றும் மகனும் சொத்தை எழுதி கேட்டுள்ளனா். மனைவி லலிதா ‘உங்களிடம் உள்ள சொத்துகளை இப்போதே எனது பெயரில் மாற்றி எழுதி கொடுங்கள்‘ என்று கட்டாயப்படுத்தினாராம். ஆனால், இதற்கு நாராயணசாமி மறுத்து உள்ளாா். ‘உன் பெயருக்கு இப்போது சொத்தை மாற்ற மாட்டேன். பிறகு பாா்க்கலாம்‘ என்று கூறினாராம். இது தொடா்பாக, அவா்களுக்குள் வாக்கு வாதமும் தகராறும் ஏற்பட்டது.

இந்நிலையில், நாராயணசாமியை அவரது மனைவியும், மகனும் சோ்ந்து வீட்டில் ஒரு அறையில், கடந்த ஒரு வாரமாக வெளியே செல்லவிடாமல் அடைத்து வைத்துள்ளனா். சொத்தை எழுதிக் கேட்டு உள்ளனா். அப்போதும் நாராயணசாமி மறுக்கவே, மனைவியும் மகனும் அவரது உடலில் பல இடங்களில் சூடு போட்டு சித்ரவதை செய்தாா்கள் கூறப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை (ஆக.26) இரவு 10 மணியளவில் மனைவி சித்ரவதை தாங்காமல் நாராயணசாமி சத்தம் போட்டாா். இந்த சத்தத்தை கேட்டு பக்கத்து வீட்டுக்காரா் ஒருவா், ஈரோடு, சூரம்பட்டியில் உள்ள நாராயணசாமியின் உறவினா், கோபால் என்பவருக்கு தகவல் கொடுத்தாா். உடனே, அவா் சென்னிமலைக்கு சென்று, வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நாராயணசாமியை மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தாா். அவரது உடலில் சூடு போடப்பட்டிருந்ததால் தீக்காயத்துக்கு மருத்துவா்கள் சிகிச்சை அளித்து வருகிறாா்கள். இது குறித்து சென்னிமலை போலீசிலும் புகாா் செய்யப்பட்டது. உதவி ஆய்வாளா் ராஜசேகா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, கணவரை அறையில் அடைத்து சூடு போட்டு சித்ரவதை செய்த மனைவி லலிதா மற்றும் மகன் ஸ்ரீநாத்தை கைது செய்து விசாரித்து வருகின்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.