இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

புயல் தாக்கி ஒரு மாதமாகியும் இன்னமும் இயல்பு நிலை திரும்பாதது கவலைக்குரியது 

கஜா புயல் தாக்கி ஒரு மாதமாகியும் பொதுமக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பாதது கவலைக்குரியது என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் 

Updated On :26 டிசம்பர் 2018, 1:30 am IST

கஜா புயல் தாக்கி ஒரு மாதமாகியும் பொதுமக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பாதது கவலைக்குரியது என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா. முத்தரசன்.
புதுகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கட்சி நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாமில் பங்கேற்கும் முன் அவர் அளித்த பேட்டி: 
1968 ஆம் ஆண்டு கீழவெண்மணி கிராமத்தில் கால்படி கூலியை உயர்த்திக் கேட்டதற்காக ஒடுக்கப்பட்ட விவசாயக் கூலித் தொழிலாளர்கள் சிறுகுடிசையில் வைத்துக் கொளுத்தப்பட்ட தினம் (டிச. 25) இன்று. கூலித் தொழிலாளர்களின் நிலை இன்னமும் மாறவே இல்லை. மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதி சட்டத்தின் கீழ் விவசாயத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் வேலை நாள்களையும், அவர்களுக்கு வழங்கப்படும் தினக்கூலியையும் அதிகரிக்க வேண்டும். 5 ஆண்டுகளுக்கும் மேலாக புறம்போக்கு நிலத்தில் வசித்து வரும் ஏழை மக்களுக்கு பட்டா வழங்கும் அரசாணை வரவேற்கத்தக்கது.
கஜா புயல் பாதிப்பு ஏற்பட்டு ஒரு மாதம் நிறைவடைந்தும் மக்களின் இயல்பு நிலை திரும்பாதது கவலைக்குரியது. பேரிடர் பாதிப்பு இயற்கை. ஆனால் அதிலிருந்து மக்களை மீட்க வேண்டியது அரசின் பொறுப்பு; கடமை. அரசு வழங்கும் நிவாரணத் தொகை போதுமானதல்ல. 
நிவாரணப் பொருள்களும் முழுமையாக விநியோகிக்கப்படவில்லை. முதல்வர் பிரதமரை நேரில் சந்தித்து ரூ. 15 ஆயிரம் கோடி நிதி கேட்டார். முதல் கட்டமாக ரூ. 1500 கோடி கேட்டார். எதுவும் வரவில்லை. மக்களைப் பற்றி கவலைப்படுகிறார்களா என்ற ஐயம் ஏற்படுகிறது என்றார் அவர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.