குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஜனநாயகமும், மதச்சார்பின்மையும் தொன்று தொட்டு இருந்து வருபவை: இல.கணேசன்

நம் நாட்டில் ஜனநாயகமும், மதசார்பற்ற தன்மையும் இன்று, நேற்றல்ல; தொன்றுதொட்டு இருந்து வருகின்றன என்றார் பா.ஜ.க. மாநிலங்களவை உறுப்பினர் இல. கணேசன்.

News image
திருச்சி தேசியக் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசுகிறார் பாஜக மாநிலங்களவை உறுப்பினர் இல. கணேசன்.
Updated On :12 பிப்ரவரி 2018, 11:13 pm

DIN

நம் நாட்டில் ஜனநாயகமும், மதசார்பற்ற தன்மையும் இன்று, நேற்றல்ல; தொன்றுதொட்டு இருந்து வருகின்றன என்றார் பா.ஜ.க. மாநிலங்களவை உறுப்பினர் இல. கணேசன்.
திருச்சி தேசியக் கல்லூரியில், தமிழ்த் துறை சார்பில் திங்கள்கிழமை நடைபெற்ற தமிழ்ப் பேரவை விழா நிகழ்ச்சியில் அவர் "இது நமக்கு புதிதல்ல' என்ற தலைப்பில் பேசியது :
இந்தியா சுதந்திரம் பெற்றதற்கு பின்னர்தான் இந்திய தேசம் உருவாக்கப்பட்டது என்றதொரு தவறான தகவல்களை சிலர் திட்டமிட்டு பரப்பி வருகின்றனர். வரலாறுகளை பொய்யாக்க முடியாது. சுதந்திரத்துக்கு முன்பே பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே ஜனநாயகம், மதசார்பற்ற தன்மை ஆகியவை இந்தியாவில் தொன்று தொட்டு நடைமுறையில் இருந்து வருகிறது என்பதற்கு வரலாறு, இதிகாசங்கள் மூலம் எத்தனையோ சான்றுகளை கூற முடியும்.
மன்னராட்சி காலத்தில் பின்பற்றப்பட்ட ஆட்சி முறைகள், மக்களாட்சி, நிர்வாகம் ஆகியவை உலகுக்கே வழிகாட்டக்கூடியவை. ராமாயண காலத்திலேயே மன்னர் மக்கள் தீர்ப்புக்கு தலை வணங்குவதை அறிய முடிகிறது. 
அதுபோலத்தான் மதசார்பின்மையும். இந்தியாவை ஆண்ட மன்னர்கள் பலரும் மத, இன பேதமின்றி ஆட்சி செய்து வந்துள்ளனர். ஒரு மன்னர் காலத்து கோயிலை அடுத்து வந்த மற்ற இனத்தைச் சேர்ந்த மன்னர்கள் போற்றி வணங்கியதுடன் மேலும் செப்பனிட்டுள்ளனர். 
மதுரை மீனாட்சிஅம்மன் கோயில், தஞ்சை பெரிய கோயில் என பலவற்றை இதற்கு உதாரணமாக கூற முடியும். ஆனால் 1975 -ஆம் ஆண்டுக்குப் பின்னர், இந்திய அரசியல் அமைப்பில் மதசார்பின்மை என்ற வார்த்தையை பதிவு செய்ய வேண்டிய கட்டாயமாயிற்று.
எனவே, நமது முன்னோர்கள் நமக்கு வகுத்துச்சென்ற நிர்வாகம், அறிவியல், வானியல் சாஸ்திரம், ஜனநாயகம் உள்ளிட்ட பல்வேறு சிறப்புகள் மூலம் நாம் இந்தியர் என்பதில் பெருமை கொள்ள வேண்டும் என்றார் இல.கணேசன். 

"ஜெயலலிதா படம் தவறில்லை!'

முன்னதாக இல.கணேசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்தை வைப்பதில் தவறில்லை. தமிழகத்தில் அவர் மறக்க முடியாத தலைவர்களில் ஒருவர்.
மத்திய அரசு இளைஞர்களுக்கு சுயதொழில் தொடங்க வங்கிக் கடனுதவி வழங்கி வருகிறது. யார் வேண்டுமானாலும் எந்த தொழிலும் தொடங்கலாம் என்ற வகையில்தான் பக்கோடா தொழில்கூட தொடங்க முடியும் எனக் கூறியதை, சிலர் விமர்சித்து வருகின்றனர். நாடாளுமன்றத்தில் எதிர்கட்சியினரின் கேள்விகளுக்கு பதில் அளித்த பிரதமர் மோடி, தவறாக ஏதும் பேசவில்லை. கேள்விகள் கடினமாக இருந்ததால் அதற்கு உரிய பதிலும் கடுமையாக இருந்தது. இதில் கண்டிக்கத்தக்க விஷயம் ஏதுமில்லை என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.