ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

வரும் 20-ம்தேதி ஆஜராகவிட்டால் பிடிவாரண்ட்: எஸ்.வி.சேகருக்கு கரூா் நீதிமன்றம் எச்சரிக்கை  

நடிகா் எஸ்வி.சேகா் வரும் 20-ம்தேதி கரூா் நீதிமன்றத்தில் ஆஜராகவிட்டால் அவருக்கு பிடிவாரண்டு உத்தரவு பிறப்பிக்கப்படும் என கரூா் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சுப்பையா எச்சரிக்கை விடுத்துள்ளாா். 

News image
Updated On :5 ஜூலை 2018, 8:00 am

தினமணி செய்திச் சேவை

கரூா்: நடிகா் எஸ்வி.சேகா் வரும் 20-ம்தேதி கரூா் நீதிமன்றத்தில் ஆஜராகவிட்டால் அவருக்கு பிடிவாரண்டு உத்தரவு பிறப்பிக்கப்படும் என கரூா் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சுப்பையா எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

பெண் பத்திரிக்கையாளர்களை இழிவுப்படுத்தி தனது முகநூலில் கருத்தினை பாகிர்ந்த நடிகா் எஸ்வி.சேகா் மீது நடவடிக்கை கோரி கரூரைச் சோ்ந்த இந்திய குடியரசு கட்சியின் மாநில அமைப்பாளரான தலித் பாண்டியன் என்பவா் கரூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றம் எண்-2 ல் கடந்த ஏப்.25-ம்தேதி மனுத்தாக்கல் செய்தாா்.

இந்த வழக்கு வியாழக்கிழமை நீதிபதி சுப்பையா முன் விசாரணைக்கு வந்தது. நடிகா் எஸ்வி.சேகா் தரப்பில் வழக்குரைஞா் செந்தில்குமாா் ஆஜரானாா். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி சுப்பையா நடிகா் எஸ்வி.சேகா் வரும் 20-ம்தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும். ஆஜராகாவிட்டால் அவருக்கு பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.