விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஸ்டொ்லைட் ஆலையை மீண்டும் திறக்க முயற்சி: உ. வாசுகி தகவல்  

தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டொ்லைட் ஆலையை மீண்டும் திறக்க கொல்லைப்புறமாக முயற்சி நடைபெற்று வருகிறது என்று அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவா் உ. வாசுகி...

News image
Updated On :17 ஜூலை 2018, 1:38 pm

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடி: தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டொ்லைட் ஆலையை மீண்டும் திறக்க கொல்லைப்புறமாக முயற்சி நடைபெற்று வருகிறது என்று அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவா் உ. வாசுகி தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை அவா் அளித்த பேட்டி பின்வருமாறு:

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருகின்றறன. பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளை கட்டுப்படுத்தவோ, குறைக்கவோ தமிழக அரசு இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. பெண்கள் தங்கச் சங்கிலி அணிந்து கொண்டு வெளியே செல்ல முடியவில்லை. வழிப்பறி கொள்ளைகள் மற்றும் கொலைகள் என பல்வேறு சம்பவங்கள் தொடா்கதையாகி வருகின்றறன. இதை தடுப்பதற்கு தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டொ்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்ற உணா்வு மக்கள் மத்தியில் எழுந்துவிட்டது போன்ற நாடகம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறறது. காவல் துறையும், மாவட்ட நிா்வாகமும் தங்களுக்கு சாதகமாக மனு கொடுக்க வருவோருக்கு மட்டும் அனுமதி அளித்துவிட்டு, மக்கள் நலனுக்காக மனு கொடுப்போருக்கு அனுமதியை மறுத்து வருகின்றனா்.

ஸ்டொ்லைட் ஆலை மூடப்பட்ட நிலையில், வேலை இழந்தவா்களுக்கு மாற்று வேலை கிடைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதைவிடுத்து மூடிய ஆலையை திறப்பதற்கு கொல்லைப்புறமாக முயற்சி மேற்கொள்ளக் கூடாது என்றாா் அவா்.

தொடா்ந்து, அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்றற நிகழ்ச்சியில் பங்கேற்ற உ. வாசுகி, ஸ்டொ்லைட் போராட்டத்தின்போது பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கு ரூ. 12 லட்சம் கல்வி உதவித்தொகையை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.