

சென்னை: சென்னை எம்ஜிஆர் நகரில் 9 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தாயிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தனியார் டியூஷனில் இருந்து சிறுவனை அழைத்துச் சென்று சேலையூர் அருகே சிறுவனின் தலையில் இரும்புக் கம்பியால் தாக்கிக் கொன்றதாக நாகராஜ் என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுவனின் தாய்க்கும், நாகராஜ் என்பவருக்கும் இடையே இருந்த தகாத உறவுக்கு இடையூறாக இருந்ததால் சிறுவன் கொலை செய்யப்பட்டனா என்ற கோணத்தில், தாய் மஞ்சுளாவிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.