சென்னை: காவிரி விவகாரத்தில் ஓட்டு வேட்டைக்காக விளையாடாதீர்கள் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கமல், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது ஒன்றும் அவ்வளவு கடினமான வேலை இல்லை. வலுவான உறுதி இருந்தால், மத்திய அரசு நினைத்தால் செய்யலாம்.
முதல்வரை சந்திக்க இன்று நேரம் கேட்டுள்ளேன். நேரம் வழங்கப்பட்டால், முதல்வர் பழனிசாமியை நேரில் சந்தித்து காவிரி வாரியம் அமைக்க வலியுறுத்துமாறு கூறுவேன். காவிரி விவகாரத்துக்காக எம்.பி.க்கள் ராஜினாமா செய்தால் நன்றாக இருக்கும். தேவைப்பட்டால் தில்லி சென்று காவிரி மேலாண்மை வாரியத்துக்காக அழுத்தம் கொடுப்பேன் என்று கூறினார்.
மேலும், 2 மாநிலங்களுக்கும் தண்ணீர் தேவை. அதற்காக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். காவிரி விவகாரத்தில் ஓட்டு வேட்டைக்காக விளையாட வேண்டாம் என்று கமல் தெரிவித்தார்.
ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த கமல், ஏப்ரல் 1ம் தேதி வரும் ஞாயிற்றுக் கிழமை தூத்துக்குடியில் மக்களின் போராட்டத்தில் பங்கேற்கிறேன் என்றார்.
செய்தியாளர்களின் மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த கமல், நாங்கள் சொல்வதை எல்லாம் அரசு கேட்கிறதா என்ன? என்று கேட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வங்கதேசத்தில் ஹிந்துக்களின் வீடுகள், கடைகள் மீது தாக்குதல்!
பிரபல பாடகி ஆஷா போஸ்லே மருத்துவமனையில் அனுமதி!
இராக் அதிபராக நிஸார் அமிதி தேர்வு!

பிகாரில் பல வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் 10 பேர் பலி, 25 பேர் காயம்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


