
தஞ்சாவூர் அருகே வல்லத்தில் பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்கள் விடைத்தாள் திருத்தும் பணியைப் புறக்கணித்து புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வல்லத்தில் பாலிடெக்னிக் கல்லூரியில் திருச்சி மண்டலத்துக்கு உள்பட்ட திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, அரியலூர் பெரம்பலூர், புதுக்கோட்டை உள்பட 9 மாவட்டங்களுக்கான பட்டயப்படிப்பு மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பணி மே 7-ம் தேதி தொடங்கியது. இதில், ஏறத்தாழ 250 விரிவுரையாளர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இப்பணியை விரிவுரையாளர்கள் புதன்கிழமை புறக்கணித்து, கல்லூரி முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வாரியத் தேர்வின் தினப்படி ரூ. 190-லிருந்து ரூ. 500 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். வாரியத் தேர்வின் பயணப் படியை உயர்த்தி தர வேண்டும். வாரியத் தேர்வின் கருத்தியல் விடைத்தாள் திருத்தும் பணியில் விடைத்தாள் ஒன்றுக்கு ரூ. 7-லிருந்து ரூ. 25 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். வாரிய கருத்தியல் தேர்வுக்குச் செல்லும் அறைக் கண்காணிப்பாளருக்கு அமர்வுக்கு ரூ. 45-லிருந்து ரூ. 200 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். இதில், ஏராளமான விரிவுரையாளர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





