இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

கோவையில் வைரஸ், பன்றிக் காய்ச்சலுக்கு இருவர் சாவு

கோவையில் வைரஸ்,  பன்றிக் காய்ச்சல் பாதிப்புக்கு இருவர் உயிரிழந்தனர்.

Published On :30 ஜனவரி 2024, 11:10 pm IST

கோவையில் வைரஸ்,  பன்றிக் காய்ச்சல் பாதிப்புக்கு இருவர் உயிரிழந்தனர்.
கோவை, வடவள்ளியைச் சேர்ந்தவர் பால்ராஜ் (62). இவர் கடந்த சில நாள்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந் நிலையில் அவரது உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து, கோவை அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டார்.  அங்கு அவர் உயிரிழந்தார்.
பன்றிக் காய்ச்சலுக்கு ஒருவர் சாவு: கோவை அருகே பெரியநாயக்கன்பாளையம் காமராஜ் நகரில் வசித்து வந்தவர் கண்ணன் (44).   இவர் கடந்த 10 நாள்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார்.  பரிசோதனையில்  அவருக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி இருப்பதை உறுதி செய்த வட்டார சுகாதார அலுவலர் ராமராஜ், அவருக்கு மருந்துகள், அவரது குடும்பத்தினருக்கு சுகாதார அறிவுரைகளை வழங்கினர். 
இந்நிலையில்,  பன்றிக் காய்ச்சல் அதிகமானதால் கோவையிலுள்ள தனியார் மருத்துவமனையில் கண்ணன் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். கோவை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கடந்த அக்டோபர் மாதம் முதல் வைரஸ், டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு காரணமாக கோவை உள்ளிட்ட  பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 66 பேர் உயிரிழந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.